கரும்புள்ளிகள் நீங்க சூப்பர் டிப்ஸ் ;

பெண்களுக்கு  தங்களது  அழகை கெடுக்கும்  வகையில்   அமைவதில்  முக்கிமான ஒன்றாக  இருப்பது  கரும்புள்ளி பிரச்சனை தான் . இவை நமது  உடலில்  ஏற்படும் ஜீன் மாற்றத்தினாலோ   அல்லது சத்து குறைபாட்டினால்  ஏற்படுகின்றன  .   எண்ணெய் பிசுக்கள்   அதிகமாக    இருப்பதால்   பருக்கள்  உண்டாகின்றன  ,நாளடைவிலே  அவை   கரும்புள்ளிக்காக    மாறிவிடுகின்றன  .  இந்த   கரும்புள்ளியை  விரைவில்  போக  சூப்பரான   டிப்ஸை   பார்க்கலாம் .

 

ரோஜா  இதழ்களுடன்   பாதாம் பருப்பை  ஊற வைத்து  அரைத்து  முகத்தில்  தடவி வர வேண்டும்  .

 

அப்படி முடியா  இயலாதவர்கள்  பப்பாளி பழம்  சிறிது  தேன் கலந்து  குழைத்து  முகத்த்தில்  தடவி வரலாம் .  பப்பாளி பழம்  இல்லையென்றால்  வாழைப்பழம்   அரைத்து முகத்தில் பூசி  கொள்ளலாம் .

 

 

வெள்ளரி சாறு ,புதினா சாறு  ,எலுமிச்சை  பழச்சாறு  ஆகியவைகளை   சம அளவில்  கலந்து  முகத்திலுள்ள  கரும்புள்ளிகள் மீது  தேய்த்து  வந்தால் கரும்புள்ளிகள்  போய்விடும் .

 

உருளைக்கிழங்கை  இரண்டாக   வெட்டி  கரும்புள்ளிகள் மீது  தடவி வர அவை  மறைந்து விடும் .

 

ஜாதிக்காயை  அரைத்துப் போட்டால்  கரும்புள்ளி  நீங்கும் .

 

முகத்தில்  வெண்ணை  தடவி  எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரால்  ஆவி பிடித்து   துண்டால்   முகத்தை அழுத்தி துடையுங்கள்  .தொடர்ந்து   இப்படி செய்துவர  கரும்புள்ளி மறையும் .

 

வெள்ளரி சாறு  ,போரிக் பவுடர் தலை 1  டீஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகளில் தடவி 5 நிமிடம் ஊறவிடவும் ,பிறகு லேசாக  மசாஜ்  செய்து துடைத்தாள் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும் .

 

கோதுமை ,தவிடு ,பால்  இரண்டும் தலா ஒரு  டேபிள் ஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில  தடவி  வர வேண்டும்  .கொஞ்ச  நாட்களில்  கரும்புள்ளிகள் வலுவிழந்து  உதிர்ந்து  விடும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் மார்பங்களை பாதுகாக்க சில டிப்ஸ் ;

எப்போதும்  இறுக்கமாக பிரா அணியாதீர்கள் .உடற் பயிற்சியின் போது  தளர்வான  அளவில்   ‘பிராக்களை ‘ அணியுங்கள் .

பிராக்களை கைகளால்   துவையுங்கள்  .வாஷிங்  மெஷின்  அடித்து  துவைத்தால்  அவற்றின் உருவம்  ,அமைப்பு மாறிவிடும் .

 

கர்ப்பகாலத்தில் அடிப்பாகத்தில்   இழை வைத்து தைக்கப்பட்ட பிராக்களை தவிருங்கள்.ஸ்பெஷல்  ஆகா  வடிவமைக்கப்பட்ட வசதியான ,தாங்கக்கூடிய  ,பொருந்தக்கூடிய  அளவில்  பிராக்களை வாங்குங்கள்  .

 

பெரிய மார்பகங்களை  உடையவர்கள் நன்கு தூக்கி  நிறுத்தக்கூடிய  பிராக்களை  அணியுங்கள் .

 

80  சதவீத   பெண்கள் – சரியான  அளவில்லாத  பிரா அணிவதால்  தோள்பட்டை  ,முதுகுவலியால்  அவதியுறுகின்றனர்  .

 

ஒரு நாளைக்கு   12  மணி நேரத்துக்கு  மேல் தொடர்ந்து ‘பிரா’ அணியாதீர்கள்  .பிராவின் அளவை சிறியதாக   அணிந்து  -இருக்கி அதன் மூலம்  மார்பகங்களை   சிறிய  அளவாக்காதீர்கள் .

 

இதற்கு பதிலாக -மினி மைலார் பிரா  அணியலாம்  .மார்பகங்களின்  அளவு ஒரு செ.மீ  வரை  சுருங்கி  டிஜிஓற்றமளிக்க செய்யும் .

 

சிறிய மார்பகங்களை   உடையவர்கள்  சாதாரணமாக  அல்லது பெரியதாக   தோற்றமளிக்க   செய்ய  அடியில்  துணிவைத்து  தைக்கப்பட்ட பாடெட் பிரா  அணியுங்கள் .

 

எப்போதாவது  தான் ‘நாடா’ இல்லாத பிராக்களை  அணிய வேண்டும் .

கண்ணனுக்கு தெரியக்கூடிய  விதம்  ‘பிரா லைன்’ அமையாமல்  கவனமாக  பார்த்து கொள்ளுங்கள் .

 

உதாரணமாக  வெள்ளை  ரவிக்கையின்  கீழ் வெள்ளை நிற  பிராவை  அணியாதீர்கள்  .உடற்பயிற்சி  மூலம்  மார்பகங்கள்  தோற்றம் வடிவாவதுடன் மார்பக  புற்றுநோயிலிருந்து   பாதுகாத்து  கொள்ளலாம் .

அடி வயிற்று சதையை குறைக்க வேண்டுமா ;

 

பொதுவாக  பெண்ணாக இருந்தாலும் சரி  ஆண் என்றாலும் சரி  மிக  பெரிய  அளவில்  தொந்தரவாகவும்  ,பல பேருடைய  கேலி  கிண்டலுக்கும் ஆளாகுவது   வீண்  அடிவயிற்று  சதையாக தான் இருக்கும். உடனடியாக  தீர்வும்  தர வேண்டும்   என்பதற்காக  பணம்  வீணாகுவதோடு  மட்டுமல்லாமல்   ,  தேவையில்லாத   தொந்தரவுகளை  சந்திக்கின்றனர்.’  நோகாமல் நொங்கு  கும்பிடமுடியாது  என்று  பழமொழிக்கு  ஏற்றவாறு  நாம்   சிறுது  கடுமையான  முற்சிகளை  செய்வதில்   எந்த ஒரு  தவறுமில்லை . அந்த வகையில்  நம் அழகை  கெடுக்கும்  வகையிலும் உடலுக்கு   எந்த ஒரு பாதிப்பும்  தராத வகையில்   பின்பற்றக்கூடியப வழிமுறையை   தெரிந்து கொள்ளலாம் .

 

உடற்பயிற்சி ,யோகா செய்வது  நம் உடலுக்கு  நல்லது  தருவதோடு  மட்டுமல்லாமல்  நம்  மனதிற்கும்  நிம்மதி தருகிறது  .

தினமும்  உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்   ,வீட்டிலிருந்த யோகா  பயிற்சி மேற்கொள்ளலாம் . இது  நமது  உடல் மேனியை  கட்டுடல்  கலையாமல்  இருக்கும் .

 

 

 

உணவு முறைகளை  கடைபிடிக்கும்  வழிமுறைகள்  ;

 

எலுமிச்சை பழச்சாற்றுடன்    சிறிது  தேன்  கலந்து  பருகலாம் ,இது நமது  அடி வயிறு சதையை  குறைப்பதோடு   மட்டுமலலாமல்   ,  உடலின் இதர சதைகளையும்  குறைக்கும் . பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத  கரு காப்பியை  குடிக்கலாம் . காபி  குடிக்க  பழக்கமில்லாதவர்கள்   இளநீர்  குடிக்கலாம் .  ஆனால் அதனுள் இருக்கும்  தேங்காய்  உண்ண வேண்டாம் .  நாம் முடிந்த வரை  தேங்காயை   பயன்படுத்தாமல்  இருப்பது  நல்லது  . சட்னயில் கூட தேங்காய்   சேர்ப்பதர்க்கு பதிலாக  வெங்காயத்தை சேர்த்து   கொள்ளலாம் .

 

 

உணவில் சேர்த்து  கொள்ளகூடிய  விஷயங்கள் ;

 

பப்பாளி காயை கூட்டு  சேர்த்து  சமைக்கலாம்  அல்லது   பப்பாளி  வைத்து  சாம்பார் செய்து  சாப்பிடலாம் .பப்பாளியை  போன்று  முள்ளங்கியை  சேர்த்து கொள்ளலாம்  . நீர்முள்,நெருஞ்சி முள் ,கொத்தமல்லி ,சோம்பு  எல்லவற்றையும்  சம அளவு   எடுத்து  அதை தூள்  செய்து  டீயில்  ,தேயிலைக்கு  பதில்  சேர்த்து பருகலாம்  .

 

இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறைய ;

ஆமணக்கு  வேரை  நன்றாக  இடித்து  தேன்  கலந்து  பிசைந்து  சிறிது  தண்ணீர்  ஊற்றி   இரவு  முழுவதும்   ஊறவைத்து மறுநாள் நீரை   வடிகட்டி  தினமும்   அரை டம்ளர்   குடித்து வர இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறையும் .

 

உடல் எடை குறைய ,இடுப்பு வலி நீங்க !

 

பிரண்டை  துண்டுகளை ஒடித்து வந்து  ,அதன் தோலை  சீவி சிறு சிறு  துண்டுகளை வேக வைத்து ,அதனை காயா வைத்து   போடி செய்து கொள்ள வேண்டும்  . இந்த பொடியுடன்   ஒரு  தேக்கரண்டி  உப்பு , ஐந்துஎலுமிச்சை   பழச்சாறு   சேர்த்து  மறுபடியும்  உயர்த்தி  எடுத்து கொள்ளவேண்டும்   .தினசரி  இதில்   அரை தேக்கரண்டி   பொடியை உணவுடனோ  ,உணவுக்கு   முன்பு  தண்ணீரிலோ   கலந்து   சாப்பிட  உடல் எடை குறைவதோடு  மட்டுமல்லாமல் , பெண்களுக்கு  ஏற்படும்  பின்  இடுப்பு    வலியும் சரி ஆகும் .

 

மேற்குறிப்பிட்ட எந்த  மருந்துக்கும்  பத்தியம் கிடையாது .அதனால்  பக்க விளைவுகளும்  கிடையாது.

 

குழந்தை வளரும் அந்த பத்து மாதங்களில் என்ன நடக்கும் தெரியுமா?

கரு பல கட்டங்களில் வளர்கிறது. ஒரு துளியில் இருந்து உருவாகும் குழந்தை முழுமையாக 280 நாட்களில் முழுக் குழந்தையாக வடிவம் பெருகிறது.

ஐந்து நாளில் நீர்த்துளி

ஒன்பதில் மிளகளவு

பனிரெண்டில் சுண்டக்காய்

பதினேழில் எலுமிச்சை

இருபதில் உருண்டை

முப்பதில் தலை கால் கைகளாகி

உருபெறும் தாயின் சேய்.

என்ற இலக்கிய நடையில் முதல் முப்பது நாள்களின் குழந்தையின்  வளர்சிதை மாற்ற நிகழ்வுகளாக கூறப்படுகிறது.

இரண்டாம் மாதம்:

குழந்தையின் தலை கழுத்து முதுகு அங்கங்கள் முழுமையான வளர்ச்சிக்கு முந்தைய நிலையை அடையும். எலும்பு வளர ஆரம்பிக்கும், இதயத்தில் உள்ள நான்கு அறைகள் தனித்தனியாக பிரியும்.

மூன்றாம் மாதம்:

இடுப்பு கை கால்கள் விரல்கள் உண்டாகி இருக்கும். குழந்தை கர்ப்பப்பை திரவத்தில் நீந்த ஆரம்பிக்கும். பல் ஈறு, கண், நகம் போன்ற பாகங்கள் முழுமையான அமைப்பை பெற முயலும்.   சிசி விழுங்கும்.  சிறுநீர் கழிக்கும். ஆனால் கண்கள் தான் திறக்க முடியாது.

நான்காம் மாதம்:

நான்காம் மாதத்தில் இருந்து  இரத்த ஓட்டம் ஓட ஆரம்பிக்கிறது. கை கால்களை உதைக்க ஆரம்பிக்கும். உடலில் பூனை உரோமங்கள் வளர ஆரம்பிக்கும்.

ஐந்தாம் மாதம்:

குழந்தையின் இதய துடிப்பை உபகரணங்கள் மூலமாக வெளியில் கேட்க முடியும். நான்காம் மாதத்தில் உதைக்க ஆரம்பித்தாலும் தற்போது தான் தாயால் சிசு உணர முடியும்.

ஆறாம் மாதம்:

கண் இமை முதன்முறையாக திறக்க ஆரம்பிக்கும். குழந்தை அந்த இருளை எவ்வாறு முதன்முதலில் எதிர்கொண்டிருக்கும். நகங்கள் முழுமையாக வளரும். ஆண் குழந்தையாக இருந்தால் விரைகள் வயிற்றுப் பகுதியில் இருந்து வெளிவரத் தொடங்கும்.

ஏழாம் மாதம்:

வெளிபாகங்கள் சற்றேறக்குறைய முழுமைப் பெற்ற நிலையில் உடலின் மிக முக்கிய பகுதியான நரம்புகள் பூரணமாக செயல்படும். குழந்தை கர்ப்பபை திரவத்தில் நன்றாக விளையாடத் தொடங்கும்.

எட்டாம் மாதம்:

குழந்தை கர்ப்பப் பையினுள் நிறைந்திருக்கும். சுற்றுவட்ட இடைக்குறைவினால் ஒருக்களித்து மடங்கிக் கிடக்கும்.

ஒன்பதாம் மாதம்:

குழந்தையின் தோலில் சுருக்கங்கள் நீங்கிக் கொழுப்புச் சத்து சேர்ந்து குழந்தை கொழு கொழுவென வளரும்.

கருப்பையும் வயிறும் சரிந்து கர்ப்பவாசல் தளர்கிறது. கருப்பையும் அந்தரங்க உறுப்பும் சுறுங்கி விரிந்து கருவை வெளியே தள்ளுகின்றன. குழந்தை இம்மானுட உலகில் கண் விழிக்கிறது.

வீட்டில் வைத்து பிரசவம் பாக்கலாமா?

பெண்கள் தன்னை பெண்ணாக உணரும் தருணங்களில் தாய்மையை தான் இன்றியமையாததாக கருதுவாள். தமிழகத்தில் இயல்பான விஷயமாக கருதப்படும் சுகப்பிரசவம் குறைந்து போனதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆக்கத்திற்கு பயன்பட்ட அறிவியலை அழிவிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். சுகப்பிரவசம் ஆகும் நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கூட சிசேரியன் மூலம் மருத்துவம் பார்க்கும் கதை செய்தித்தாள்களில் பார்க்கமுடிகிறது. அதுவும் சிகிச்சை தோல்வியடையும் போது தான் வெளிவருகிறது.

சுகப்பிரசவம் இல்லாமல் போனதுக்கு முக்கியமான காரணமாக நமது லைஃப்ஸ்டைலும் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதலுமே முன் வைக்கப்படுகிறது. அதில் தெளிவு கொண்டால் தாய்மார்களின் உடல் நலத்தில் தொல்லைகள் இல்லாமல் இருக்கும்.

வீட்டில் வைத்து பிரசவம் பாக்கலாமா:

பண்டைய தமிழகத்தில் வீட்டில் வைத்துதானே பிரசவம் பார்த்தோம் அதில் எந்த தவறும் நடக்கவில்லையே என்றெல்லாம் பலர் பேசக் கேள்விப்பட்டிருக்கோம்.

ஆனால் அதில் சில முரண்களும் முன்வைக்கப்படுகின்றன. அன்றைய காலத்தில் எல்லோருக்கும் இருந்த தேக நலன் இப்போது இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். அன்றைய காலத்தில் கிடைத்த சுத்தமான காற்றை இப்போது நாம் சுவாசிக்கிறோமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்று பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்கிறார்கள். அப்படி இருக்கையில் வீட்டில் இருந்து பிரசவம் பார்க்கும் போது அசௌகரியம் ஏற்பாட்டால் என்ன செய்வது ?

பத்து மாதம் சுமந்து வலியும் வேதனையுமான காலங்கள் பெண்களுக்குத் தான் தெரியும் அந்த வலிகளை ஒன்னுமில்லாமல் ஆக்க பிறந்த குழந்தையால் முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் பிரசவத்தை மருத்துவமனையில் மட்டுமே பார்க்க வேண்டும்.

தலை சிறந்த மருத்துவச்சிகளை நாம் கொண்டிருந்தோம் என்றாலும் அந்த மருத்துவச்சிகளும் தற்போதைய சூழலில் அவர்களும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

குழந்தை கண்டிப்பாக அழவேண்டும்

பிறந்த குழந்தை பிறந்த உடனே அழ வேண்டும். அப்படி அழுதால் தான் குழந்தையால் சுவாசிக்க முடியும் இல்லையெனில் ஒன்று குழந்தை திணறிப்போகும்  அல்லது மூளை வளர்ச்சி குறைந்தாகிவிடும் என்கிறது மருத்துவ வல்லுனர்களின் ரிப்போர்ட்.

எனவே பிரசவத்தை மருத்துவமனையில் வைத்து பார்ப்பது தான் தற்போதைய சூழலில் சிறந்ததும் பாதுகாப்பானதும் கூட என்பதை நாம் தெளிவாகக் கொள்ள வேண்டும்.

 

 

மேற்கோள்கள்: திருமதி ராஜம் அனந்தராமன்

மூன்று இதழ்களை கொண்ட செயற்கைப் பூ

செயற்கையாக ஒன்று ஆக்கவேண்டுமெனில் இயற்கையாக ஒரு பொருளை உதாரணமாக கொண்டுதான் செய்ய முடியும்.  அந்த வகையில் செயற்கையாக ஒரு மலரை செய்ய வேண்டுமெனில் இயற்கையாக இருக்கும் ஒரு மலரை எடுத்து தான் அதனைச் செய்ய முடியும். மலரென்றால் அடிப்படையாக ஒரு மலருக்கு இருப்பது இதழ், மொட்டு, காம்பு, இலை சில மலர்களுக்கு இவையனைத்தும் சிலவற்றில் மேலே குறிப்பிட்டவற்றில் இல்லாமலும் இருக்கலாம்.

தனிதனியாக இந்த பாகங்களை செய்து வைத்து அதை இறுதியில் ஒன்றிணைப்பது தான் பெரும்பாலோனோரின் முறையாக இருக்கிறது எனவே அதையே பின்பற்றலாம்.

மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற மலர் ஒன்றை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மலருக்காக சிவப்பு கிரேப் பேப்பரும் இலைக்காக பச்சை கிரேப் பேப்பரும் காம்பிற்காக கம்பியையும், இதை நேர்த்தியாக்க நூலும் பச்சை கம்டேப்பும் இதை செய்வதற்கு போதுமானது.

கைவினைஞர் ஆகலாம்,

இதழ்களைச் செய்ய சிவப்பு நிற கிரேப் பேப்பரை எடுத்து விருப்பமான இதழ் மாடல்களை இணையத்தில் இருந்து பார்த்து அதன்மேல் வரைந்து கொள்ளவும். பின் கூர்மையான கத்திரிக்கோலைப் பயன்படுத்தி நேர்த்தியாக நறுக்கிக் கொள்ளவும்.

இதே போன்று 3 இதழ்களை நறுக்கிக் கொள்ளவும். பச்சை கிரேப் பேப்பரை எடுத்து இலை வடிவத்தில் (2 பீஸ்) நறுக்கிக் கொள்ளவும்.

கம்பியை பூ காம்பிற்காக 5” நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை கம் டேப்பால் அதை சுற்றிக் கொள்ளவும். பின் கம்பியின் ஒரு நுனியை கொக்கிபோல் வளைத்துக் கொள்ளவும் அதில் இதழைக் கம்பியில் இணைக்க வேண்டும். படத்தில் காட்டியவாறு இதழை கம்பியுடன் வைத்து நூலால் கட்டிக் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே உருவாக்கிய இலைகளை காம்புடன் இணைக்க பக்கவாட்டாக இரண்டு கம்பிகளை எதிரெதிர் திசைகளில் இணைக்க வேண்டும். பக்கவாட்டுக் கம்பியை காம்புடன் இணைக்க பச்சை கம் டேப்பை பயன்படுத்த    வேண்டும்.

இதே போல் 5 இதழ்களை கொண்டை பேசிக் செயற்கை மலர்களை தயாரிக்கலாம்.

இயற்கை முறையில் அழகு சேர்க்க;

உடற்பயிற்சி  செய்தாலோ  ,காஸ்மெடிக்ஸ்  பயன்படுத்தியோ   அழகுப்படுத்தும்  பெண்களுக்கு    ஏகப்பட்ட பின்விளைவை  ஏற்படுத்தும்  .இயற்கை மருத்துவ குறிப்புகளை   யாரையும் எதிர்பார்க்காமல்  ,நாம் பயன்படுத்துவதோடு  மட்டுமல்லாமல்  எந்த ஒரு பின்விளைவையும்  ஏற்படுத்தாது .அதற்கான வலி முறைகளை பார்க்கலாம் .

முடி நன்றாக வளர ;

முடி  செழித்து  வளர  வாரம்  ஒரு முறை   வெண்ணெயை தலைக்கு தடவி  ஒரு மணி நேரம் கழித்து அலசி  வந்தால்  முடி  நன்றாக வளரும்.

கருவளையம் நீங்க ;

கண்களை  சுற்றியுள்ள  கருவளையம்   நீங்க   வெள்ளரிக்காய்  ஜுசை பஞ்சில்  நனைத்து   கண்கள் மீது தினமும்  போட்டு வரவும் .

உதடு  வசீகர  தோற்றம் பெற ;

உதடு   வசீகரமாக  இருக்க  முட்டையில்  வெண்கரு   ,பதம் பவுடர் ,பால் இம்மூன்றையும்  கலந்து   உதட்டில் தடவி  அது காய்ந்ததும்   சூடு நீரில்  கழுவி விட வேண்டும் .

முகம் பொலிவு  பெற ;

உருளைக்கிழங்கை  இடித்து  சாறு பிழிந்து ,சமமாக  தென் கலந்து  முகத்தில்  தடவினால்  முகம் அழகுபெறும் .

 

முகச்சுருக்கம்  நீங்க ;

முகத்தில் உள்ள சுருக்கம்  மறைய  முட்டையின்  வெண்கருவை  தடவுங்கள் ,சிறிது நேரம்  கழித்து  முகம் கழுவ  முகத்திலுள்ள  சுருக்கம் மறையும் .

கருமை நீங்க ;

கருமையடைந்த    முகம் பொலிவு  பெற    பாதாம் பருப்பை   பாலில் அரைத்து  இரவில் முகத்தில் தொடர்ந்து  பூசிவர பொலிவு பெறும்.

 

முக வறட்சி  நீங்க ;

முகத்தில்  வறட்சி அகல   பச்சை கொத்தமல்லி   அல்லது  புதினாவை  நன்றாக  அரைத்து   முகத்தில்  பூசி  பிறகு சிறிது  நேரம்  கழித்து அலம்ப  வேண்டும் .

 

முகப்பரு  நீங்க ;

முகப்பருக்கள்  போக  பூண்டு அல்லது கருந்துளசியை   அரைத்து  போட நாளடைவில் பருக்கள்  மறையும் .

 

வாய் நாற்றம் நீங்க ;

வாய் துர்நாற்றம்   நாம் பேசும் பொது  உண்டாகும்  ,எப்போதும்   புத்துணர்வோடு  இருக்க  வேண்டுமென்றால்  , புதினை கீரையை  காயவைத்து  போடி செய்து   பல் துலக்கி வந்தால் புத்துணர்வோடு இருப்பதோடு மட்டுமல்லாமல்  பல் வெண்மையாக இருக்கும் .

 

பல் வெண்மையாக இருக்க;

பல்  வெண்மையாக இருக்க   இரவு  நேரத்தில்  தினமும் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன்  பல் வெண்மை பெறும்.

 

உதடு  ஷைனிங்  பெற ;

உதடு  வறண்டு  காணப்படுகிறதோ ,அதை போக்கி   ஷைனிங் பெற தினமும்  உதட்டின் மேல்  தேங்காய் எண்ணெய்  தடவி வந்தால்  ஷைனிங்  தோற்றறை பெறும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

செயற்கை மலர்கள் செய்ய வேண்டுமா? கீழ்காணும் பொருட்கள் இருந்தால் போதும்

இல்லத்தரசிகள் தங்களின் ஓய்வு நேரத்தை போக்க வழியின்றித் தவிக்கிறீர்களா? தங்கள் வீட்டை இன்னும் அழகுப் படுத்த விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் சம்பாதிக்கும் எண்ணம் இருக்கிறதா? டைம் பாஸ் பண்ண வழியின்றித் தவிக்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை நிறைவேறவேண்டுமெனில் இதை மட்டும் செய்யுங்கள்.

மலர்கள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பெண்களாக மட்டும் தான் இருப்பார்கள். சிலருக்கு சில மலர்களின் வாசனை ஒவ்வாது. அதற்காகவே செயற்கை மலர்கள் இருக்கின்றன. அத்தகைய செயற்கை மலரை செய்வது கடினமான காரியம் ஒன்றும் இல்லை.

மேலும் பெண்களைப் பொறுத்தவரையில் ஒருவர் பயன்படுத்தும் மாடலை நாம் பயன்படுத்தக் கூடாது என்கிற எண்ணம் பெரும்பாலும் உண்டு. கடைகளில் பெரும்பாலும் ஒரேவிதமான டிசைன்களில் தான் கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆகையால் தனக்கான தனித்தன்மையை நிரூபீக்க கைவினைப் பொருட்களை மிகக் குறைந்த செலவில் தாங்களாகவே தயாரிக்கக் கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்தத் தொடரைக் கட்டாயம் வாசியுங்கள்.

இந்தக் கட்டுரையில் செயற்கை மலர்கள் எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

செயற்கை மலர்கள் செய்யத் தேவையான பொருட்கள்

1) காகிதம் – கிரேப், டபுள் கிரேப், மெல்லிய கைதுடைக்கும் தாள்,

2) துணி  – சாட்டின், சில்க்  ஆர்கண்டி, மெழுகு, நெட்டி ஸ்டாக்கிங் சோப் வெல்வெட்

போன்ற பொருட்களில் செயற்கை மலர்களைச் செய்தால் ஒரு சிறப்பான டிசைன்களில் கிடைக்கும்.

உபகரணங்கள்:

1)2 கூர்மையான கத்திரிக்கோல்கள் – காகிதம் வெட்ட-1, துணி வெட்ட – 1

2) ப்ளையர் – கம்பிகளை வெட்ட, முறுக்கிவிட பயன்படும்.

3) ஃப்ளோரல் டேப் – வெள்ளை, பச்சை, சிவப்பு என பலவண்ணங்களில் கிடைக்கும். இதற்கு பதில் கிரேப் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரும் பயன்படுத்தலாம்

ஐந்து நிமிடத்தில் மேக் அப்

அலுவலகம்  சென்று  வேலை பார்க்கும் பெண்களுக்கும் ,கல்லூரி பள்ளிகளில் படிக்கும்   மாணவிகளுக்கும்  தான் அவசரம்  என்பதில்லை.சாதாரண குடும்ப  தலைவிகளுக்கு  கூட அவசர   அவசரமாக  புறப்பட்டு  செல்ல வேண்டிய  சூழ்நிலை  ஏற்படுகிறது .

அந்த அவசரத்தில்  அழகான’ மேக் -அப்  ‘ போட்டுக் கொள்வதை பெண்கள்   அறிந்து  வைத்திருக்க வேண்டும்  .5 நிமிடத்தில்  அழகாக ‘ மேக் -அப்  ‘  செய்ய  இதனைப் பின்பற்றுங்கள்   .

முதலில்  முகத்தை சோப்பிட்டு கழுவி  துடையுங்கள்  .சரும பாதுகாப்புக்காக   ‘லிக்யுட் ‘

பவுன்டேசன்  நாலு அல்லது  ஐந்து துளிகள் எடுத்து  முகத்தில்  தடவி கொள்ளுங்கள் . முகத்திற்கு

நிறத்திற்கேற்ப  பொருத்தமான  பௌடெரை  பூசுங்கள் .

அடர்ந்த புருவம் இருந்தால்  பிரஷ் செய்தால் மட்டும் போதும் .இல்லாவிட்டால்  ஐ -ப்ரோ  பென்சில்  மூலம் லேசாக வரையுங்கள்  .

உடுத்தும் உடைகளுக்கு  ஏற்ப   இளம்  நிறத்தில்  ஐ -ஷேடோ  போடலாம் .

கண் மை பயன்படுத்தினால்   அதிக நேரம் ஆகும் .அதனால் ஐ – பென்சில் சிறந்தது . கருப்பு  ,பிரவுன்  ,நீல நிறத்தில்   பென்சில்கள்  கிடைக்கின்றன .

உடைகளில்  நிறம் ,ஐ -ஷேடோ ஆகியவைகளுக்கு  பொருத்தமான லிப்ஸ்டிக்  பயன்படுத்துங்கள் .

சாந்து ,குங்குமம் ,ஸ்டிக்கர்  போட்டு  அல்லது ஐ -லைனர்  கொண்டு  பொட்டு வைத்து  கொள்ளவும் .

அப்புறம் என்ன ? கண்ணாடி  முன்பு நில்லுங்கள்  ! அழகாக இருப்பீர்கள். வேறு என்ன ?தேவைப்பட்டால்  ‘சென்ட் ‘ பூசி கொண்டு   கிளம்ப வேண்டியது தான்.

 

 

 

 

 

 

முடி வளருவதற்கான மிக எளிய டிப்ஸ்

 

ஊட்டசத்தான  உணவு  ;

ஊட்டசத்துக்கள்  அடங்கிய  உணவு வகைகளை  தேர்ந்தெடுத்து சாப்பிட்டு  வந்தாலும்  முடி உதிர்வது குறையத்  தொடங்கும்  .குறிப்பாக  பொன்னாங்கண்ணி ,கரிசலாங்கண்ணி ,வல்லாரை ,அகத்திக்கீரை  உள்ளிட்ட  கீரை வகைகளும்  ,சப்போட்டா மற்றும் நாகப்பழம்  போன்றவையும்  சாப்பிட்டு வர கூந்தல் உதிர்வது குறைவதோடு  நன்றாக  வளரவும்  தொடங்கும் .அதோடு கருவேப்பில்லை நெல்லிக்காய் சாப்பிடுவதும்  நல்லது .

 

 

சூடான  ஆயில்  மசாஜ் ;

முடி  உதிர்வதைத்  தடுக்கவும்  அதை  நன்கு வளர செய்யவும்  காய் கொடுக்கும் எளிய  ட்ரீட்மெண்ட்  சூடான  ஆயில்  மசாஜ்  தான் சிறந்த  முறை . தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் அல்லது ஆலிவ்  எண்ணெய் இவற்றில் எதையாவது ஒன்றாய்   சுமார் ஆறு டேபிள்  ஸ்பூன்   எடுத்து   லேசாக  சூடுபடுத்தி  கொள்ளுங்கள் .வெதுவெதுப்பான   இந்த எண்ணெய்யை  தலையில் ஊற்றி இரண்டு கைகளாலும்  நன்றாக  மசாஜ்  செய்ய வேண்டும் .

 

 

மசாஜ் எப்படி செய்வது ?

தலையில் சீராக  எண்ணெய்  தடவியதும்  உங்கள்  விரல் நுனிகளால்  தலை  முழுவதும்  சின்ன சின்ன வட்டங்களாக  மசாஜ்  செய்து விடுங்கள் . ஒரு முறை  மேலிருந்து  கீழ்  நோக்கியும்  மற்றொரு  முறை  கீழிருந்து  மேல்  நோக்கியும்   இதே போல மசாஜ்  செய்ய  வேண்டும் .இப்படி செய்யும் போது  முடியை  கசக்கவோ  ,சிக்காகவோ  கூடாது .

 

தலைக்கு  பரவலாக  மசாஜ் செய்து  முடிந்ததும்  நெற்றியில்  பொட்டு வைக்கும் இடத்தில  சுட்டு   விரலால்  வட்ட வடிவில்  தேய்த்து அழுத்தம் தாருங்கள்  .அடுத்ததாக   நெற்றி பொட்டுக்கும்  பிறகு   மேல்  நெற்றியிலும்  , உச்சியிலும்  பின் மண்டையிலும் ,கடைசியாக   காதின்  பின்புறமுள்ள  குழி  பகுதிகளிலும்  இதே போல  வட்ட வடிவில்  விரல்களால்   மாசாஜ் செய்ய வேண்டும்  ,ஒவ்வொரு  பகுதியிலும்  குறைந்து இருபது  முறை  மசாஜ்  செய்துவிட வேண்டும்  .

மசாஜ் செய்து முடித்ததும்  வெந்நீரில்   டர்க்கி   டவல்  ஒன்றை நன்றாக நனைத்து பிழிந்து  அதில் கூந்தலை  மொத்தமாக   அள்ளி தலையின் உச்சியில்  முடிந்து கொள்ளுங்கள் ,இதே போல மூன்று  முறை   செய்து   வந்தால்   தலையில்  தடவியுள்ள   எண்ணெய் உள்ளுக்குள்   எளிதாக  இறங்கும் .வாரத்துக்கு   இரண்டு  முறை இப்படி    தலைக்கு  சீயக்காயையோ  அல்லது  தரமான  ஷாம்பூவையோ தடவி குளிக்க வேண்டும் .

குறிப்பு ; அதிகப்படியான சூட்டை  வெளியேறவிடாமல் உள்ளே  அதிக நேரம்  தங்கச் செய்யும்  தன்மை   டர்க்கி  டவலுக்கு உள்ளதால்  டான்  இதை  நாம் பயன்படுத்துகிறோம் .