குழந்தை வளரும் அந்த பத்து மாதங்களில் என்ன நடக்கும் தெரியுமா?

கரு பல கட்டங்களில் வளர்கிறது. ஒரு துளியில் இருந்து உருவாகும் குழந்தை முழுமையாக 280 நாட்களில் முழுக் குழந்தையாக வடிவம் பெருகிறது.

ஐந்து நாளில் நீர்த்துளி

ஒன்பதில் மிளகளவு

பனிரெண்டில் சுண்டக்காய்

பதினேழில் எலுமிச்சை

இருபதில் உருண்டை

முப்பதில் தலை கால் கைகளாகி

உருபெறும் தாயின் சேய்.

என்ற இலக்கிய நடையில் முதல் முப்பது நாள்களின் குழந்தையின்  வளர்சிதை மாற்ற நிகழ்வுகளாக கூறப்படுகிறது.

இரண்டாம் மாதம்:

குழந்தையின் தலை கழுத்து முதுகு அங்கங்கள் முழுமையான வளர்ச்சிக்கு முந்தைய நிலையை அடையும். எலும்பு வளர ஆரம்பிக்கும், இதயத்தில் உள்ள நான்கு அறைகள் தனித்தனியாக பிரியும்.

மூன்றாம் மாதம்:

இடுப்பு கை கால்கள் விரல்கள் உண்டாகி இருக்கும். குழந்தை கர்ப்பப்பை திரவத்தில் நீந்த ஆரம்பிக்கும். பல் ஈறு, கண், நகம் போன்ற பாகங்கள் முழுமையான அமைப்பை பெற முயலும்.   சிசி விழுங்கும்.  சிறுநீர் கழிக்கும். ஆனால் கண்கள் தான் திறக்க முடியாது.

நான்காம் மாதம்:

நான்காம் மாதத்தில் இருந்து  இரத்த ஓட்டம் ஓட ஆரம்பிக்கிறது. கை கால்களை உதைக்க ஆரம்பிக்கும். உடலில் பூனை உரோமங்கள் வளர ஆரம்பிக்கும்.

ஐந்தாம் மாதம்:

குழந்தையின் இதய துடிப்பை உபகரணங்கள் மூலமாக வெளியில் கேட்க முடியும். நான்காம் மாதத்தில் உதைக்க ஆரம்பித்தாலும் தற்போது தான் தாயால் சிசு உணர முடியும்.

ஆறாம் மாதம்:

கண் இமை முதன்முறையாக திறக்க ஆரம்பிக்கும். குழந்தை அந்த இருளை எவ்வாறு முதன்முதலில் எதிர்கொண்டிருக்கும். நகங்கள் முழுமையாக வளரும். ஆண் குழந்தையாக இருந்தால் விரைகள் வயிற்றுப் பகுதியில் இருந்து வெளிவரத் தொடங்கும்.

ஏழாம் மாதம்:

வெளிபாகங்கள் சற்றேறக்குறைய முழுமைப் பெற்ற நிலையில் உடலின் மிக முக்கிய பகுதியான நரம்புகள் பூரணமாக செயல்படும். குழந்தை கர்ப்பபை திரவத்தில் நன்றாக விளையாடத் தொடங்கும்.

எட்டாம் மாதம்:

குழந்தை கர்ப்பப் பையினுள் நிறைந்திருக்கும். சுற்றுவட்ட இடைக்குறைவினால் ஒருக்களித்து மடங்கிக் கிடக்கும்.

ஒன்பதாம் மாதம்:

குழந்தையின் தோலில் சுருக்கங்கள் நீங்கிக் கொழுப்புச் சத்து சேர்ந்து குழந்தை கொழு கொழுவென வளரும்.

கருப்பையும் வயிறும் சரிந்து கர்ப்பவாசல் தளர்கிறது. கருப்பையும் அந்தரங்க உறுப்பும் சுறுங்கி விரிந்து கருவை வெளியே தள்ளுகின்றன. குழந்தை இம்மானுட உலகில் கண் விழிக்கிறது.

கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

காலை உணவு:

காலை உணவுக்கு இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம், ஆப்பம் ஏற்றது.  உளுந்தில் தசைக்கும் நரம்புக்கும் தேவையான வலிமையைக் குடுக்கும் சத்துப்பொருட்கள் உள்ளன. பயிறில் புரதச்சத்து இருப்பதால் விட்டமின் சி குறைப்பாட்டை தடுக்கிறது. சட்னியில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய் இதயத்தை வலுப்படுத்தப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. தேங்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. குடலுக்குள்ளே ஏற்படும் புண்களை ஆற்றுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது. மல்லிக்கீரை இரத்த சோகையை போக்குகிறது.

மதிய உணவு:

மதிய உணவுக்கு புழுங்கல் அரிசி சாதம் சிறப்பானதாக  இருக்கும். கீரை வகைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை அதே சமயம் செரிமானம் ஆக நேரம் எடுத்துக் கொள்ளும். முளைக்கீரை , சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை என முடிந்தவரைக்கும் தினம் ஒரு கீரைச் சேர்க்க வேண்டும். சாதத்திற்கு ரசம், சாம்பார் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதால் சிசு வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.   ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு வயிற்றில் உண்டாகும் வாயுவை அகற்றுவதுடன் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையையும் போக்குகிறது. பூண்டு கொழுப்பை கரைப்பதுடன் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. சீரகம் தலைச்சுற்றல் வாந்தியையும் பித்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இரவு உணவு:

 

Related image

இரவு வேலைகளில் செரிமான சுரப்பிகள் செயல்படுவதன் வீரியம் குறைவு எனவே எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிப்பதற்கு எளிதாக இருக்கும். ஏற்கனவே வயிறு குமட்டலுடன் இருக்கும் கர்ப்பிணிகள் செரிக்காமல் அஜீரணக்கோளாறுகளில் சிக்கினால் மிகப்பெரிய அளவில் விபரீதத்தை சந்திக்க நேரிடும். உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பதை  தவிர்க்க வேண்டும்.  நொறுக்குத் தீனிகளை  தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

நண்டு இறால் சுறா மீன், காபி, டீ, பப்பாளி, அன்னாசி, ஐஸ்கிரீம், பனீர், சீஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டில் பானங்கள், மைதா உணவுகள் தவிர்க்க வேண்டும்