கரு பல கட்டங்களில் வளர்கிறது. ஒரு துளியில் இருந்து உருவாகும் குழந்தை முழுமையாக 280 நாட்களில் முழுக் குழந்தையாக வடிவம் பெருகிறது.
ஐந்து நாளில் நீர்த்துளி
ஒன்பதில் மிளகளவு
பனிரெண்டில் சுண்டக்காய்
பதினேழில் எலுமிச்சை
இருபதில் உருண்டை
முப்பதில் தலை கால் கைகளாகி
உருபெறும் தாயின் சேய்.
என்ற இலக்கிய நடையில் முதல் முப்பது நாள்களின் குழந்தையின் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளாக கூறப்படுகிறது.
இரண்டாம் மாதம்:
குழந்தையின் தலை கழுத்து முதுகு அங்கங்கள் முழுமையான வளர்ச்சிக்கு முந்தைய நிலையை அடையும். எலும்பு வளர ஆரம்பிக்கும், இதயத்தில் உள்ள நான்கு அறைகள் தனித்தனியாக பிரியும்.
மூன்றாம் மாதம்:
இடுப்பு கை கால்கள் விரல்கள் உண்டாகி இருக்கும். குழந்தை கர்ப்பப்பை திரவத்தில் நீந்த ஆரம்பிக்கும். பல் ஈறு, கண், நகம் போன்ற பாகங்கள் முழுமையான அமைப்பை பெற முயலும். சிசி விழுங்கும். சிறுநீர் கழிக்கும். ஆனால் கண்கள் தான் திறக்க முடியாது.
நான்காம் மாதம்:
நான்காம் மாதத்தில் இருந்து இரத்த ஓட்டம் ஓட ஆரம்பிக்கிறது. கை கால்களை உதைக்க ஆரம்பிக்கும். உடலில் பூனை உரோமங்கள் வளர ஆரம்பிக்கும்.
ஐந்தாம் மாதம்:
குழந்தையின் இதய துடிப்பை உபகரணங்கள் மூலமாக வெளியில் கேட்க முடியும். நான்காம் மாதத்தில் உதைக்க ஆரம்பித்தாலும் தற்போது தான் தாயால் சிசு உணர முடியும்.
ஆறாம் மாதம்:
கண் இமை முதன்முறையாக திறக்க ஆரம்பிக்கும். குழந்தை அந்த இருளை எவ்வாறு முதன்முதலில் எதிர்கொண்டிருக்கும். நகங்கள் முழுமையாக வளரும். ஆண் குழந்தையாக இருந்தால் விரைகள் வயிற்றுப் பகுதியில் இருந்து வெளிவரத் தொடங்கும்.
ஏழாம் மாதம்:
வெளிபாகங்கள் சற்றேறக்குறைய முழுமைப் பெற்ற நிலையில் உடலின் மிக முக்கிய பகுதியான நரம்புகள் பூரணமாக செயல்படும். குழந்தை கர்ப்பபை திரவத்தில் நன்றாக விளையாடத் தொடங்கும்.
எட்டாம் மாதம்:
குழந்தை கர்ப்பப் பையினுள் நிறைந்திருக்கும். சுற்றுவட்ட இடைக்குறைவினால் ஒருக்களித்து மடங்கிக் கிடக்கும்.
ஒன்பதாம் மாதம்:
குழந்தையின் தோலில் சுருக்கங்கள் நீங்கிக் கொழுப்புச் சத்து சேர்ந்து குழந்தை கொழு கொழுவென வளரும்.
கருப்பையும் வயிறும் சரிந்து கர்ப்பவாசல் தளர்கிறது. கருப்பையும் அந்தரங்க உறுப்பும் சுறுங்கி விரிந்து கருவை வெளியே தள்ளுகின்றன. குழந்தை இம்மானுட உலகில் கண் விழிக்கிறது.