அடி வயிற்று சதையை குறைக்க வேண்டுமா ;

 

பொதுவாக  பெண்ணாக இருந்தாலும் சரி  ஆண் என்றாலும் சரி  மிக  பெரிய  அளவில்  தொந்தரவாகவும்  ,பல பேருடைய  கேலி  கிண்டலுக்கும் ஆளாகுவது   வீண்  அடிவயிற்று  சதையாக தான் இருக்கும். உடனடியாக  தீர்வும்  தர வேண்டும்   என்பதற்காக  பணம்  வீணாகுவதோடு  மட்டுமல்லாமல்   ,  தேவையில்லாத   தொந்தரவுகளை  சந்திக்கின்றனர்.’  நோகாமல் நொங்கு  கும்பிடமுடியாது  என்று  பழமொழிக்கு  ஏற்றவாறு  நாம்   சிறுது  கடுமையான  முற்சிகளை  செய்வதில்   எந்த ஒரு  தவறுமில்லை . அந்த வகையில்  நம் அழகை  கெடுக்கும்  வகையிலும் உடலுக்கு   எந்த ஒரு பாதிப்பும்  தராத வகையில்   பின்பற்றக்கூடியப வழிமுறையை   தெரிந்து கொள்ளலாம் .

 

உடற்பயிற்சி ,யோகா செய்வது  நம் உடலுக்கு  நல்லது  தருவதோடு  மட்டுமல்லாமல்  நம்  மனதிற்கும்  நிம்மதி தருகிறது  .

தினமும்  உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்   ,வீட்டிலிருந்த யோகா  பயிற்சி மேற்கொள்ளலாம் . இது  நமது  உடல் மேனியை  கட்டுடல்  கலையாமல்  இருக்கும் .

 

 

 

உணவு முறைகளை  கடைபிடிக்கும்  வழிமுறைகள்  ;

 

எலுமிச்சை பழச்சாற்றுடன்    சிறிது  தேன்  கலந்து  பருகலாம் ,இது நமது  அடி வயிறு சதையை  குறைப்பதோடு   மட்டுமலலாமல்   ,  உடலின் இதர சதைகளையும்  குறைக்கும் . பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத  கரு காப்பியை  குடிக்கலாம் . காபி  குடிக்க  பழக்கமில்லாதவர்கள்   இளநீர்  குடிக்கலாம் .  ஆனால் அதனுள் இருக்கும்  தேங்காய்  உண்ண வேண்டாம் .  நாம் முடிந்த வரை  தேங்காயை   பயன்படுத்தாமல்  இருப்பது  நல்லது  . சட்னயில் கூட தேங்காய்   சேர்ப்பதர்க்கு பதிலாக  வெங்காயத்தை சேர்த்து   கொள்ளலாம் .

 

 

உணவில் சேர்த்து  கொள்ளகூடிய  விஷயங்கள் ;

 

பப்பாளி காயை கூட்டு  சேர்த்து  சமைக்கலாம்  அல்லது   பப்பாளி  வைத்து  சாம்பார் செய்து  சாப்பிடலாம் .பப்பாளியை  போன்று  முள்ளங்கியை  சேர்த்து கொள்ளலாம்  . நீர்முள்,நெருஞ்சி முள் ,கொத்தமல்லி ,சோம்பு  எல்லவற்றையும்  சம அளவு   எடுத்து  அதை தூள்  செய்து  டீயில்  ,தேயிலைக்கு  பதில்  சேர்த்து பருகலாம்  .

 

இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறைய ;

ஆமணக்கு  வேரை  நன்றாக  இடித்து  தேன்  கலந்து  பிசைந்து  சிறிது  தண்ணீர்  ஊற்றி   இரவு  முழுவதும்   ஊறவைத்து மறுநாள் நீரை   வடிகட்டி  தினமும்   அரை டம்ளர்   குடித்து வர இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறையும் .

 

உடல் எடை குறைய ,இடுப்பு வலி நீங்க !

 

பிரண்டை  துண்டுகளை ஒடித்து வந்து  ,அதன் தோலை  சீவி சிறு சிறு  துண்டுகளை வேக வைத்து ,அதனை காயா வைத்து   போடி செய்து கொள்ள வேண்டும்  . இந்த பொடியுடன்   ஒரு  தேக்கரண்டி  உப்பு , ஐந்துஎலுமிச்சை   பழச்சாறு   சேர்த்து  மறுபடியும்  உயர்த்தி  எடுத்து கொள்ளவேண்டும்   .தினசரி  இதில்   அரை தேக்கரண்டி   பொடியை உணவுடனோ  ,உணவுக்கு   முன்பு  தண்ணீரிலோ   கலந்து   சாப்பிட  உடல் எடை குறைவதோடு  மட்டுமல்லாமல் , பெண்களுக்கு  ஏற்படும்  பின்  இடுப்பு    வலியும் சரி ஆகும் .

 

மேற்குறிப்பிட்ட எந்த  மருந்துக்கும்  பத்தியம் கிடையாது .அதனால்  பக்க விளைவுகளும்  கிடையாது.

 

இயற்கை முறையில் அழகு சேர்க்க;

உடற்பயிற்சி  செய்தாலோ  ,காஸ்மெடிக்ஸ்  பயன்படுத்தியோ   அழகுப்படுத்தும்  பெண்களுக்கு    ஏகப்பட்ட பின்விளைவை  ஏற்படுத்தும்  .இயற்கை மருத்துவ குறிப்புகளை   யாரையும் எதிர்பார்க்காமல்  ,நாம் பயன்படுத்துவதோடு  மட்டுமல்லாமல்  எந்த ஒரு பின்விளைவையும்  ஏற்படுத்தாது .அதற்கான வலி முறைகளை பார்க்கலாம் .

முடி நன்றாக வளர ;

முடி  செழித்து  வளர  வாரம்  ஒரு முறை   வெண்ணெயை தலைக்கு தடவி  ஒரு மணி நேரம் கழித்து அலசி  வந்தால்  முடி  நன்றாக வளரும்.

கருவளையம் நீங்க ;

கண்களை  சுற்றியுள்ள  கருவளையம்   நீங்க   வெள்ளரிக்காய்  ஜுசை பஞ்சில்  நனைத்து   கண்கள் மீது தினமும்  போட்டு வரவும் .

உதடு  வசீகர  தோற்றம் பெற ;

உதடு   வசீகரமாக  இருக்க  முட்டையில்  வெண்கரு   ,பதம் பவுடர் ,பால் இம்மூன்றையும்  கலந்து   உதட்டில் தடவி  அது காய்ந்ததும்   சூடு நீரில்  கழுவி விட வேண்டும் .

முகம் பொலிவு  பெற ;

உருளைக்கிழங்கை  இடித்து  சாறு பிழிந்து ,சமமாக  தென் கலந்து  முகத்தில்  தடவினால்  முகம் அழகுபெறும் .

 

முகச்சுருக்கம்  நீங்க ;

முகத்தில் உள்ள சுருக்கம்  மறைய  முட்டையின்  வெண்கருவை  தடவுங்கள் ,சிறிது நேரம்  கழித்து  முகம் கழுவ  முகத்திலுள்ள  சுருக்கம் மறையும் .

கருமை நீங்க ;

கருமையடைந்த    முகம் பொலிவு  பெற    பாதாம் பருப்பை   பாலில் அரைத்து  இரவில் முகத்தில் தொடர்ந்து  பூசிவர பொலிவு பெறும்.

 

முக வறட்சி  நீங்க ;

முகத்தில்  வறட்சி அகல   பச்சை கொத்தமல்லி   அல்லது  புதினாவை  நன்றாக  அரைத்து   முகத்தில்  பூசி  பிறகு சிறிது  நேரம்  கழித்து அலம்ப  வேண்டும் .

 

முகப்பரு  நீங்க ;

முகப்பருக்கள்  போக  பூண்டு அல்லது கருந்துளசியை   அரைத்து  போட நாளடைவில் பருக்கள்  மறையும் .

 

வாய் நாற்றம் நீங்க ;

வாய் துர்நாற்றம்   நாம் பேசும் பொது  உண்டாகும்  ,எப்போதும்   புத்துணர்வோடு  இருக்க  வேண்டுமென்றால்  , புதினை கீரையை  காயவைத்து  போடி செய்து   பல் துலக்கி வந்தால் புத்துணர்வோடு இருப்பதோடு மட்டுமல்லாமல்  பல் வெண்மையாக இருக்கும் .

 

பல் வெண்மையாக இருக்க;

பல்  வெண்மையாக இருக்க   இரவு  நேரத்தில்  தினமும் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன்  பல் வெண்மை பெறும்.

 

உதடு  ஷைனிங்  பெற ;

உதடு  வறண்டு  காணப்படுகிறதோ ,அதை போக்கி   ஷைனிங் பெற தினமும்  உதட்டின் மேல்  தேங்காய் எண்ணெய்  தடவி வந்தால்  ஷைனிங்  தோற்றறை பெறும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஐந்து நிமிடத்தில் மேக் அப்

அலுவலகம்  சென்று  வேலை பார்க்கும் பெண்களுக்கும் ,கல்லூரி பள்ளிகளில் படிக்கும்   மாணவிகளுக்கும்  தான் அவசரம்  என்பதில்லை.சாதாரண குடும்ப  தலைவிகளுக்கு  கூட அவசர   அவசரமாக  புறப்பட்டு  செல்ல வேண்டிய  சூழ்நிலை  ஏற்படுகிறது .

அந்த அவசரத்தில்  அழகான’ மேக் -அப்  ‘ போட்டுக் கொள்வதை பெண்கள்   அறிந்து  வைத்திருக்க வேண்டும்  .5 நிமிடத்தில்  அழகாக ‘ மேக் -அப்  ‘  செய்ய  இதனைப் பின்பற்றுங்கள்   .

முதலில்  முகத்தை சோப்பிட்டு கழுவி  துடையுங்கள்  .சரும பாதுகாப்புக்காக   ‘லிக்யுட் ‘

பவுன்டேசன்  நாலு அல்லது  ஐந்து துளிகள் எடுத்து  முகத்தில்  தடவி கொள்ளுங்கள் . முகத்திற்கு

நிறத்திற்கேற்ப  பொருத்தமான  பௌடெரை  பூசுங்கள் .

அடர்ந்த புருவம் இருந்தால்  பிரஷ் செய்தால் மட்டும் போதும் .இல்லாவிட்டால்  ஐ -ப்ரோ  பென்சில்  மூலம் லேசாக வரையுங்கள்  .

உடுத்தும் உடைகளுக்கு  ஏற்ப   இளம்  நிறத்தில்  ஐ -ஷேடோ  போடலாம் .

கண் மை பயன்படுத்தினால்   அதிக நேரம் ஆகும் .அதனால் ஐ – பென்சில் சிறந்தது . கருப்பு  ,பிரவுன்  ,நீல நிறத்தில்   பென்சில்கள்  கிடைக்கின்றன .

உடைகளில்  நிறம் ,ஐ -ஷேடோ ஆகியவைகளுக்கு  பொருத்தமான லிப்ஸ்டிக்  பயன்படுத்துங்கள் .

சாந்து ,குங்குமம் ,ஸ்டிக்கர்  போட்டு  அல்லது ஐ -லைனர்  கொண்டு  பொட்டு வைத்து  கொள்ளவும் .

அப்புறம் என்ன ? கண்ணாடி  முன்பு நில்லுங்கள்  ! அழகாக இருப்பீர்கள். வேறு என்ன ?தேவைப்பட்டால்  ‘சென்ட் ‘ பூசி கொண்டு   கிளம்ப வேண்டியது தான்.

 

 

 

 

 

 

முடி வளருவதற்கான மிக எளிய டிப்ஸ்

 

ஊட்டசத்தான  உணவு  ;

ஊட்டசத்துக்கள்  அடங்கிய  உணவு வகைகளை  தேர்ந்தெடுத்து சாப்பிட்டு  வந்தாலும்  முடி உதிர்வது குறையத்  தொடங்கும்  .குறிப்பாக  பொன்னாங்கண்ணி ,கரிசலாங்கண்ணி ,வல்லாரை ,அகத்திக்கீரை  உள்ளிட்ட  கீரை வகைகளும்  ,சப்போட்டா மற்றும் நாகப்பழம்  போன்றவையும்  சாப்பிட்டு வர கூந்தல் உதிர்வது குறைவதோடு  நன்றாக  வளரவும்  தொடங்கும் .அதோடு கருவேப்பில்லை நெல்லிக்காய் சாப்பிடுவதும்  நல்லது .

 

 

சூடான  ஆயில்  மசாஜ் ;

முடி  உதிர்வதைத்  தடுக்கவும்  அதை  நன்கு வளர செய்யவும்  காய் கொடுக்கும் எளிய  ட்ரீட்மெண்ட்  சூடான  ஆயில்  மசாஜ்  தான் சிறந்த  முறை . தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் அல்லது ஆலிவ்  எண்ணெய் இவற்றில் எதையாவது ஒன்றாய்   சுமார் ஆறு டேபிள்  ஸ்பூன்   எடுத்து   லேசாக  சூடுபடுத்தி  கொள்ளுங்கள் .வெதுவெதுப்பான   இந்த எண்ணெய்யை  தலையில் ஊற்றி இரண்டு கைகளாலும்  நன்றாக  மசாஜ்  செய்ய வேண்டும் .

 

 

மசாஜ் எப்படி செய்வது ?

தலையில் சீராக  எண்ணெய்  தடவியதும்  உங்கள்  விரல் நுனிகளால்  தலை  முழுவதும்  சின்ன சின்ன வட்டங்களாக  மசாஜ்  செய்து விடுங்கள் . ஒரு முறை  மேலிருந்து  கீழ்  நோக்கியும்  மற்றொரு  முறை  கீழிருந்து  மேல்  நோக்கியும்   இதே போல மசாஜ்  செய்ய  வேண்டும் .இப்படி செய்யும் போது  முடியை  கசக்கவோ  ,சிக்காகவோ  கூடாது .

 

தலைக்கு  பரவலாக  மசாஜ் செய்து  முடிந்ததும்  நெற்றியில்  பொட்டு வைக்கும் இடத்தில  சுட்டு   விரலால்  வட்ட வடிவில்  தேய்த்து அழுத்தம் தாருங்கள்  .அடுத்ததாக   நெற்றி பொட்டுக்கும்  பிறகு   மேல்  நெற்றியிலும்  , உச்சியிலும்  பின் மண்டையிலும் ,கடைசியாக   காதின்  பின்புறமுள்ள  குழி  பகுதிகளிலும்  இதே போல  வட்ட வடிவில்  விரல்களால்   மாசாஜ் செய்ய வேண்டும்  ,ஒவ்வொரு  பகுதியிலும்  குறைந்து இருபது  முறை  மசாஜ்  செய்துவிட வேண்டும்  .

மசாஜ் செய்து முடித்ததும்  வெந்நீரில்   டர்க்கி   டவல்  ஒன்றை நன்றாக நனைத்து பிழிந்து  அதில் கூந்தலை  மொத்தமாக   அள்ளி தலையின் உச்சியில்  முடிந்து கொள்ளுங்கள் ,இதே போல மூன்று  முறை   செய்து   வந்தால்   தலையில்  தடவியுள்ள   எண்ணெய் உள்ளுக்குள்   எளிதாக  இறங்கும் .வாரத்துக்கு   இரண்டு  முறை இப்படி    தலைக்கு  சீயக்காயையோ  அல்லது  தரமான  ஷாம்பூவையோ தடவி குளிக்க வேண்டும் .

குறிப்பு ; அதிகப்படியான சூட்டை  வெளியேறவிடாமல் உள்ளே  அதிக நேரம்  தங்கச் செய்யும்  தன்மை   டர்க்கி  டவலுக்கு உள்ளதால்  டான்  இதை  நாம் பயன்படுத்துகிறோம் .

 

 

தேவையற்ற முடியை அகற்ற

தேவையற்ற ரோமங்களால்   பெண்களுக்கு ஏகப்பட்ட மனக்குழப்பம்  ஏற்படுகிறது .அடுத்தவர்களுக்கு  அசிங்கமாக  தெரியுமே  என்று  நினைத்து கொண்டு  நான்கு பேருக்கு  மத்தியில்   செல்லவே  கவலைப்படுவார்கள் .

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த   நிவாரணம் அளிக்கும் முறையை  பயன்படுத்தினால் அனாவசியமான ரோமங்களை  அகற்ற  செய்யலாம் .ஆனால் அதில் ஒரு  சிக்கல் இருக்கிறது  அது என்னவென்றால்  தொடர்ந்து ‘ ஷேவிங் ‘ செய்ய  வேண்டிய  நிர்பந்தம்  ஏற்படும் ,’ஹேர்  ரீமாவின் ‘ க்ரீம்களும்  முழுமையான  நிவாரணம் தருவதில்லை .இருப்பவைகளில் சிறந்த வழி ‘வாக்சிங்’ செய்வதே .தொடர்ந்து   ‘வாக்சிங்’  செய்தால்பலன் கிடைக்கும்  .அதுவும் நாம் வீட்டில் இருந்தே  அதை செய்யலாம்  , அதற்கான  வழிமுறை  என்னவென்பதை  தெரிந்து  கொள்ளலாம் .

 

 

தேவைப்படும்  பொருட்கள் ;

 

சர்க்கரை  – 500 கிராம்

எலுமிச்சை சாறு  – 3 பழத்தினுடையது

கிளிசரின்  – 1  1 /2 தேக்கரண்டி

 

செய்முறை  ;

 

எலுமிச்சை பழச்சாற்றில்   சர்க்கரையை  சேர்க்கவும்  .லேசான சூட்டில்  10  முதல் 15 நிமிடம்   அந்த கலவையை  வைக்கவும்  .தேன் நிறத்தில்  அது  கெட்டியாகும் பொது கிளிசரின் சேர்த்து  இறக்கவும் .இந்த கலவையை முடி உள்ளங்காலில்  சூட்டோடு  தேய்க்கவும் .பின்பு நீளமான   காட்டன் துணியால் இறுக்கவும்  . கலவை  ஆறியதும்  ரோமம்  வளந்திருக்கும்   திசைக்கு   தக்கபடி  துணியை  இழுத்து  எடுங்கள்.

குறிப்பு ;பியூட்டி பார்லருக்கு   சென்று ஒன்று  அல்லது  இரண்டு  முறை செய்த பின்பே  சுயமாக   வாக்சிங்  செய்யலாம் .அதுவே   சரியான  முறைப்படி செய்வதாக  இருக்கும் .

முகத்தில்  வளர்ந்துள்ள   மூடியை  அகற்ற  மஞ்சள் பொடி  ,கடலை மாவு,பன்னீர்  ஆகிய  மூன்றையும்  கூழ் போல கலந்து  முகத்தில்  அழுத்தி தேய்க்க  வேண்டும் .அடிக்கடி  இப்படி  செய்வதால் தேவையற்ற   முடி  உதிர்ந்துவிடும் .

உடல் எடையை குறைக்க உதவும் எட்டு வழிகள்

நம் அன்றாட  வேலைகளை செய்யவும் ,உடல் உறுப்புகள்  இயங்கவும் ,நமக்கு  சக்தி  தேவைப்படுகிறது .இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் வாயில் தான் கலோரி  கிடைக்கிறது . அதனை கலோரி  என்ற  அளவிடால்  அளவிடுகிறார்கள் .ஆனால்  நாம்  எடுத்து  கொள்ளும் உணவு  உடல் கலோரி செலவிடும் சக்தியை  காட்டிலும் அதிகமாகும் போது ,உடல்  கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது .

சில பேர்  அதிகமாக  உணவு உண்டாலும்  அவர்களின்  உடல்  ஏறவே  ஏறாது , அதே போல   சில பேருக்கு  உணவு உண்ணாமல் இருந்தாலும் அவர்களுக்கு   எடை அதிகரித்து கொண்டே இருக்கும்,இந்த கேள்விக்கான  பதில்  என்னவென்றால் ,இந்த கொழுப்பு  அதிகரித்து செல்வதாலே  நமது உடல் எடை  அதிகமாகும் .ஆனால் மிக சிலருக்கு  மட்டும் ஹார்மோன்   காரணங்களால்   உடல் எடை குறையும் , சில பேருக்கு  பருமனும்  அதிகரிக்கின்றன .

 

ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட  இந்த வழிமுறையை  பயன்படுத்தினாலே  குறைந்தது மாதம் 4 கிலோ  எடை  குறைவது  மிக உறுதி .

 

எழுந்தவுடன் தண்ணீர் பருக வேண்டும் ;

தினசரி  காலை  எழுந்தவுடன்  ஒன்று அல்லது  இரண்டு  டம்ளர்   தண்ணீர் பருகி  வர வேண்டும் . இரவு நேரங்களில் அதிக  அளவில்  தண்ணீர் பருகாமல் இருப்பது நல்லது .காலையில் எழுந்தவுடன் வெறும்  வயிற்றில்  தண்ணீரை குடித்தால்  ஏகப்பட்ட  நன்மைகள்  உண்டாகும் .

 

உடற்பயிற்சி  செய்வதால்  ஏற்படும் நன்மைகள் ;

தினமும்  குறைந்தது  35  நிமிடம் உடற்பயிற்சி ,வேகநடை ,ஸ்பாட்  ஜாக்கிங்  , கைகளின் ,ஸ்கிப்பிங்  போன்றவையோ அல்லது இதர பயிற்சிகள் செய்து  வரவும் . இதை நமது  உடலில் உள்ள  கொழுப்புகளை  கரைக்க உதவுகின்றன .

 

உடற்பயிற்சி செய்யும் போது எடுத்து கொள்ளகூடிய  ஜூஸ்  வகைகள் ;

உடற்பயிற்சி செய்யும் போது நாம் தினமும்  பிரெஷாக   வெண்பூசணி அரைத்து  சர்க்கரை இல்லாமல்  சாறை பருகவும் . வெண்பூசணி பிடிக்காதவர்கள்  வாழைத்தண்டு  சாறை    குடிக்கவும் . இதை  தினசரி பருகி  வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம் .

 

டீ,காப்பி  பருகும் போது  கடைபிடிக்க வேண்டியவை ;

காப்பி  , டீ அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள் ,அதில் பால் சேர்ப்பதற்கு  பதிலாக   காப்பி  அல்லது  டீயில்   எலுமிச்சை சாறு

பிழிந்து அருந்தலாம் .பால் சேர்த்து  அருந்துபவர்களாக  இர்ருந்தால் பாலை 3 -4  முறை காய்ச்சி  ஆடை  நீக்கிய   பின் பயன்படுவது  நல்லது .முடிந்தவரை   சர்க்கரையை தவிர்பது நல்லது.

 

 

  காலை  எடுத்து  கொள்ள கூடிய  உணவு   வகைகள் ;

 

நன்றாக வெண்ணை  எடுத்த  மோர்   தினமும்  காலையில்  எழுந்தவுடன்  குடித்து  வரவும் . வெறும் மோர் மற்றும் எடுத்து கொள்ளாமல் அதனுடன்  கொய்யா  கனியை  சாப்பிட்டு  வரலாம் . பிறகு   காலையில்  நாம் சாப்பிடும் பொது  வெண்ணை தடவாத   ரொட்டி ,ஸாண்டவிச் அல்லது  இதில் இரண்டு  எடுத்து  கொள்ளலாம் .

 

மத்திய  உணவு எடுத்து கொள்ளும்  உணவு  வகைகள் ;

இரண்டு கரண்டி  ஏதேனும் ஒரு வகை கீரையையும்  அதனுடன்  2 கரண்டி நீர்சத்து   அதிகமுள்ள  காய்கறிகளான  வெண்பூசணி அல்லது  புடலங்காயுடன் பருப்பு சேர்த்து  தேங்காய்  சேர்க்காமல்  கூட்டு  ,1  கரண்டி  சாம்பாருக்கு  ஒரு  கப்  சாதம்  அல்லது  எண்ணெய் சேர்க்காத

இரண்டு  கோதுமை சப்பாத்தி  ,1  கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது 1 டம்ளர்  மோரை  எடுத்து கொள்ளலாம் .

 

இரவு  உணவில் எடுத்து கொள்ளக்கூடியவை ,

வேக வைத்த காய்கறிகள் 3 கப்  அல்லது  சூப் பப்பாளி  அல்லது ஆரஞ்சு  அல்லது பைன் ஆப்பிள் 6 துண்டு அல்லது கொய்யா 3 துண்டு .

 

நாம் அன்றாட வாழ்வில்  கடைபிடிக்க வேண்டியவை ;

பச்சை  காய்கறிகள் சாலட் ,பகலில் உறங்குவதை   தவிர்ப்பது நல்லது .எண்ணெய்  பதார்த்தங்களை   மற்றும்   நொறுக்குத் தீனிகளை   தவிர்கவும் .உப்புள்ள  ஆதாரங்களை   அதாவது  ஊறுகாய் ,சிப்ஸ் ,உப்பு ,பிஸ்கட்  தவிர்க்கவும்  .இரவில்  உண்ட பின்னர்  குறுநடை   செய்த பின்னர் உறங்க செல்லவும் .’இளைத்தவனுக்கு  எள்ளு கொழுத்தவனுக்கு  கொள்ளு ‘ என்ற பழமொழிக்கு   ஏற்ப  காலையில்  கொள்ளு  கஞ்சி கொடுப்பது  நல்லது .

மஞ்சளின் மகத்துவங்கள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது ஊரறிந்த உண்மை. அதனால் தான் மஞ்சளை நீரில் கரைத்து வீடெங்கும் தெளிப்பர். நோய்க்கிருமிகள் அண்டவே அண்டாது என்பது அறிவியல் உண்மையென்றாலும் மங்களகறமாக இருக்க மஞ்சளை நல்ல நாள் பெரிய நாட்களில் வீடுகளில் தெளிப்பது வழக்கம்.

நெஞ்சு சளி, இருமல் வயிற்றுவலி, சேற்றுப்புண், கால் ஆணி, நகச்சுற்று, சிறுநீர்க்கோளாறு என பிராண்டட் வியாதிகளுக்கு ஒற்றை அருமருந்து மஞ்சள் தான்.

நீங்கா நெஞ்சுசளி நீங்க:

சளியென்றாலே பலருக்கும் சனியாகத் தான் இருக்கும். இதில் நெஞ்சு சலி என்றால் சொல்லவே வேண்டாம். உடலை உருக்கி எடுத்து விடும் விரும்பியதை உண்ணவிடாது. நெஞ்சுசலி வந்துவிட்டதா நேராக அடுப்படிக்குச் செல்லுங்கள் ஒரு தம்ளர் சூடான் பசும்பாலில் சிறுது மஞ்சள் தூள் அரை ட்யூஸ்பூன் அரை டீஸ்பூன் மிளகுத் தூள் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச் சளி கரைந்து போய்விடும்.

சளி இருக்கும் பெரும்பாலோனோருக்கு இருமலும் உடன் வந்துவிடும் . வலியுடன் கூடிய வறட்டு இருமலுக்கும் தீர்வு வைத்திருக்கிறாள் மூலிகை ராணி மஞ்சள். மஞ்சள் தூளைத் தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட இருமலுக்கு பை பை சொல்லலாம்.

தேகம் மிளிர மஞ்சள்:

மஞ்சள் பூசிக் குளித்தால் முகம் அதிர்ச்சி அடைந்து விடும். சருமம் உலர்ந்துவிடும் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரத்தையெல்லாம் நம்பிவிட வேண்டாம்.காயவைத்த பசு மஞ்சள், வெள்ளை மிளகு, நெல்லி வித்து வேப்பம் வித்து கடுக்காய்த்தூள் பொருட்களை சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தவும்.

மிஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக் கொள்ளவும் அருமையான மூலிகைப் பொடி தயார். இந்தத் தூளில் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து குழைத்து முகம் கழுத்து கைகால்களில் தடவி நன்றாக குளிக்கவும். பளபளப்பான சருமம் கிடைக்கும்.

மஞ்சள் அக்மார்க் முத்திரையிடப்பட்ட கிளென்சர் என்பதால் சருமம் சுத்தமாகிறது. தினமும் தேய்த்துக் குளித்தால் மேனி பொன்மேனியாக மாறிவிடும்.

சர்வ வித்தகன் மஞ்சள்:

ஆறாத புண்கள், கட்டிகள், கால் ஆணி என அனைத்திற்கும் மஞ்சள் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

துளசியும் எண்ணற்ற மருத்துவ குணங்களும்

நம்மோடு நமக்காக நம்மைச் சுற்றியே இருக்கும் அற்புதத் தாவரங்கள் இயற்கையன்னையின் வழங்கியிருக்கும் மிகப்பெரிய கொடை.

எந்த நோய் ஏற்பட்டாலும் சாதரண மருத்துவக் குணம் கொண்டத்  தாவரங்களைக் கொண்டு  மருத்துவம்  பார்க்க முடியும். நோயின் வீரியத்தைப் பொறுத்து வீரிய மருந்துகளை படிப்படியாக நாட வேண்டும் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

உடல்பிணி தீர மட்டுமில்லாமல், அழகு கிடைக்க, இளமை நீடிக்க என நாம் உண்ணும் உணவிலேயே மருத்துவக் குணாதியசங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்பற்றி குணமாகவில்லையென்றாலும் சவமாவதைத் தள்ளி போடலாம்.

துளசி:

துளசியின் மருத்துவப் பயன் சொல்லி மாளாது. அதனால் துளசித் தண்ணீர் குடிங்கன்னு சாதரணமா சொன்னா யாராச்சும் கேப்பாங்களோ மாட்டாங்களோன்னுதான் ஸ்ரீ விஷ்ணுவுக்குப் பிரியம் என்று சொல்லி தெய்வீக மூலிகையாக்கி நன்மை கொண்டாடிவிட்டனர்.

துளசியில்  கருந்துளசி, செந்துளசி, நற்றுளசி நாய்துளசி, முள் துளசி, நிலத்துளசி எனப்  பலவகைகள் உண்டு. ஆனால் கருந்துளசியே அதிக மருத்துவப் பயனுடையது.

இலை, கிளை, தண்டு, ஆகியவை கரும்பச்சை நிறத்திலும், கதிர்கள் சிவப்பு நீல நிறத்திலும் இருக்கும். காரமும் மணமும் அதிகமாக இருக்கும் என்பதே கருந்துளசிக்கான அடையாளங்கள்.

நோயற்ற வாழ்வு வாழ:

சுத்தமான செம்புப் பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு ஐந்தாறு மணிநேரம் ஊறவைத்த பின் அந்த நீரை தினமும் பருகி வந்தால் எந்த நோயும் அவ்வளவு எளிதாக நம்மை அண்டாது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் என்ற பெயரில் வழங்குவதும் இதை வைத்து தான்.

 சளித் தொல்லை நீங்க:

சளித்தொல்லையால் ரொம்ப கஷ்டபடுறீங்களா? இஞ்சியும் துளசி இலையும் கையில் இருக்கிறதா அப்போ கவலையை விடுங்க… ஐந்தாறு துளசி இலைகளுடன், சிறிது இஞ்சி சேர்த்து நன்றாய் மென்று விழுங்குங்கள். நிச்சயம் காரமாகத் தான் இருக்கும். அதற்கும் தீர்வு இருக்கிறது ஆறவைத்த சுடுதண்ணீர் குடியுங்கள் காரம் தானக இறங்கிவிடும். அப்புறம் பாருங்கள் சளித்தொந்தராவது பை பாய் சொல்லுங்கள்.

கக்குவான் இருமலைக் குணப்படுத்த:

சிறு குழந்தைகளைப் படுத்தி எடுக்கும் கக்குவான் இருமலுக்கு துளசிப்பூ வைத்தியம் நம்பகமானது. துளசிப்பூவுடன் வசம்பு திப்பிலி, இரண்டையும் சம அளவு வெயிலில் உலர்த்தி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் துளசிப் பொடியை தேவையான அளவு தேனில் கலந்து தந்தால், சளி எளிதில் விரைவில் குணமாகும். இருமல் படிபடியாக கட்டுப்படும்.

வயிற்றில் பூச்சியா ? மாத்திரையை கைவிடுங்கள்:

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் வயிறு சார்ந்த கோளாறுகளை உண்டுபண்ணுவதுடன் மந்த நிலைக்கும் ஆளாக்கும். ஒரு பிடி துளசி எடுத்து விரட்டுங்கள் பூச்சிகளை ! இரண்டு தம்ளர் தண்ணீரில் துளசியுடன் அரை ட்யூஸ்பூன் மிளகுப்பொடி போட்டு அரைத் தம்ளருக்கு வற்றக் காய்ச்சி அந்நீரைப் பருகி வந்தால் கிருமித் தொல்லை நீங்கும். வயிறு உபாதையும் நீங்கும்.

தலைவலி நீங்க:

தலைவலி என்பது சாதரணமாக எல்லாரோரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு பிரச்சினை. துளசியுடன், ஒரு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கம் வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் உடனே தலைவலி தணியும். தாய்ப்பால் கிடைத்தால் அதில் இதைக் கலந்து பற்று போட்டால் இன்னும் அதீத பலன் கிடைக்கும்.

பூச்சிக்கடியா?

துளசி, ஓம இலை இரண்டையும் கலந்து ரஸம் போல தயாரித்து அருந்தி வந்தால் மெழுகுபோல மேனியில் பளபளப்பு ஏறும்.

பொடுகு தொல்லை நீங்க:

பொடுகு இருப்பவர்கள் ஒரு வித தாழ்வுமனப்பான்மையால் பொது இடங்களுக்கு தங்களை முன்னிறுத்துவதை விரும்பமாட்டார்கள். அப்படி இருப்பவர்களுக்காக இந்த டிப்ஸ் இரண்டு வசம்பைச் சுட்டு, பொடியாக அரைத்துக் கொள்ளவும். கருந்துளசியை விழுதாக அரைத்துக் கொள்ளவும் இரண்டு அரைவைகளையும் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கொதிக்க வைத்து இரண்டு நாள் சென்றபின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து குளிக்க ஈறு பேன் தொல்லை அறவே இருக்காது.

மூலிகை ராணியான துளசி நமது வீட்டிலேயே வளர்க்க முடியும். பண்டைய காலந்தொட்டு இன்றும் சில இடங்களில் துளசி மாடங்கள் இருக்கின்றன. கடவுள்  நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மூலிகை ராணியான துளசியை முடிந்தவரை வீட்டில் வளர்ப்போம். மருந்து மாத்திரைகளைத் தவிர்ப்போம்.

Post 5

Lorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et dolore v Lorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et dolore

Post 3