சகாயம் 19 என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி


சகாயம் 19 என்ற மாற்று திறனாளிகளுக்கான நிகழ்ச்சி கோவை  பெர்ஸ்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி மாற்று திறனாளிக்கான இசை,  நடனம்,
கட்டுரை,  ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  இப்போட்டியில் 500க்கும்
மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு
சான்றிதழ்களும் கோப்பைகளும் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

சகாயத்தின் மக்கள் பாதை மூலமாக பொதுமக்கள் மற்றும் இளைஞருக்கான நலத்திட்டங்கள்
தொடர்ந்து செய்யப்ப்பட்டு வருகிறது.  குறிப்பாக கைத்தெறி நெசவாளர்களைப் பாதுகாக்கும்
திட்டம், சகாயம் இ.ஆ.ப (IAS) பயிற்சி வகுப்புகள் என பல்வேறு மக்களுக்கான திட்டங்கள்
சகாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.  அந்த வகையில்
தான் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தப் போட்டியும் பார்க்கப்படுகிறது.