விவசாய நிலங்கள் பறிப்பு : தேர்தல் வாக்குறுதிகளின் அவலம்


தூத்துக்குடி கயத்தாரில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 400 ஏக்கர் விவசாய
நிலங்களை எந்த நோட்டிசும் வழங்காமல் பட்டா நீக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து
தூத்துக்குடி தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி போராட்டம் நடத்தப்போவதாக
தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் கோரிக்கையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம்
விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று சொல்வது உண்மைதான். ஒட்டுமொத்த விவசாய
நிலத்தையும் அபகரித்துக் கொண்டாள் விவசாயக் கடனே வராது என்பதால் தான் அவ்வளவு
தைரியமா வாக்குறுதி கொடுத்தார்கள் .

இந்நிலையில் கோவையில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000ம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்
மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் விவசாய அணியினர் மோடிக்கு
17 ரூபாய் வரைவு காசோலையை விரைவு தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசும், எதிர்கட்சிகளும் மாறி மாறி அறிக்கைகள் விடும்
இந்தச் சமயத்தில் விவசாயப் பட்டாக்கள் அபகரிப்பு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர்
துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை
வழங்கி கௌரவித்தார்.

பட்டமளிப்புக்கு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
தம்பிதுரை பலநேரங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அவரது சொந்தக் கருத்தாகவே பார்க்க
வேண்டும். அதிமுக ஜனநாயகக் கட்சி எனவும் இங்கு அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும்
உரிமை அனைவருக்கும் இருப்பது போல தம்பிதுரைக்கும் இருக்கிறது எனக் கருத்து
தெரிவித்தார். ஆனால் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுகவின் பொறுப்பாளர்கள் கூடி முடிவெடுத்து
அறிவிப்பார்கள்.

தூத்துக்குடி நாடளுமன்றத் தொகுதியில் கனிமொழி உட்பட யார் எதிர்த்து நின்றாலும்
அதிமுக தலைமை அறிவிக்கிற வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். கடந்து நாடாளுமன்றத்
தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம்
இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.