மூன்று இதழ்களை கொண்ட செயற்கைப் பூ

செயற்கையாக ஒன்று ஆக்கவேண்டுமெனில் இயற்கையாக ஒரு பொருளை உதாரணமாக கொண்டுதான் செய்ய முடியும்.  அந்த வகையில் செயற்கையாக ஒரு மலரை செய்ய வேண்டுமெனில் இயற்கையாக இருக்கும் ஒரு மலரை எடுத்து தான் அதனைச் செய்ய முடியும். மலரென்றால் அடிப்படையாக ஒரு மலருக்கு இருப்பது இதழ், மொட்டு, காம்பு, இலை சில மலர்களுக்கு இவையனைத்தும் சிலவற்றில் மேலே குறிப்பிட்டவற்றில் இல்லாமலும் இருக்கலாம்.

தனிதனியாக இந்த பாகங்களை செய்து வைத்து அதை இறுதியில் ஒன்றிணைப்பது தான் பெரும்பாலோனோரின் முறையாக இருக்கிறது எனவே அதையே பின்பற்றலாம்.

மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற மலர் ஒன்றை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மலருக்காக சிவப்பு கிரேப் பேப்பரும் இலைக்காக பச்சை கிரேப் பேப்பரும் காம்பிற்காக கம்பியையும், இதை நேர்த்தியாக்க நூலும் பச்சை கம்டேப்பும் இதை செய்வதற்கு போதுமானது.

கைவினைஞர் ஆகலாம்,

இதழ்களைச் செய்ய சிவப்பு நிற கிரேப் பேப்பரை எடுத்து விருப்பமான இதழ் மாடல்களை இணையத்தில் இருந்து பார்த்து அதன்மேல் வரைந்து கொள்ளவும். பின் கூர்மையான கத்திரிக்கோலைப் பயன்படுத்தி நேர்த்தியாக நறுக்கிக் கொள்ளவும்.

இதே போன்று 3 இதழ்களை நறுக்கிக் கொள்ளவும். பச்சை கிரேப் பேப்பரை எடுத்து இலை வடிவத்தில் (2 பீஸ்) நறுக்கிக் கொள்ளவும்.

கம்பியை பூ காம்பிற்காக 5” நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை கம் டேப்பால் அதை சுற்றிக் கொள்ளவும். பின் கம்பியின் ஒரு நுனியை கொக்கிபோல் வளைத்துக் கொள்ளவும் அதில் இதழைக் கம்பியில் இணைக்க வேண்டும். படத்தில் காட்டியவாறு இதழை கம்பியுடன் வைத்து நூலால் கட்டிக் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே உருவாக்கிய இலைகளை காம்புடன் இணைக்க பக்கவாட்டாக இரண்டு கம்பிகளை எதிரெதிர் திசைகளில் இணைக்க வேண்டும். பக்கவாட்டுக் கம்பியை காம்புடன் இணைக்க பச்சை கம் டேப்பை பயன்படுத்த    வேண்டும்.

இதே போல் 5 இதழ்களை கொண்டை பேசிக் செயற்கை மலர்களை தயாரிக்கலாம்.

அணியின் ஒற்றுமையே வெற்றிக்கு காரணம்: ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா, நியூஸிலாந்துக்கு எதிரான 5வது போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அணியின் ஒற்றுமையே இந்த வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா ஒருநாள் தொடரை இந்திய அணி போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய நிலையில், நான்காவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. நட்சத்திர வீரர் கோலி இல்லாவிட்டாலும், இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. துவக்க வீரர்கள் சொதப்பினாலும், நடுநிலை வீரர்களான ராயுடு 90 ரன்களும், விஜய் சங்கர் மற்றும் ஹர்டிக் பாண்ட்யா 45 ரன்களும் அடித்து அணிக்கு ஒரு நல்ல இலக்கை கொடுக்க உதவினர்.

பவுலிங்கிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 217 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆல் அவுட்டானது. இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய தற்காலிக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, “டாஸ் வென்ற போது நான் வீரர்களிடம், எல்லோரும் சேர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறினேன். அதுதான் நடந்தது. 4 விக்கெட்டுகள் போன பிறகு, எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ராயுடுவும், விஜய் ஷங்கரும் அதை கொடுத்தனர். பின்னர், ஹர்டிக் மற்றும் கேதர் அருமையாக விளையாடினர். பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி சரியான நேரத்தில் பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுபோன்ற போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால் அணியில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். இங்கு வந்து நியூஸிலாந்தை நிறுத்துவது சாதாரண காரியமல்ல” என்று கூறினார்.

Post 5

Lorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et dolore v Lorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et dolore

Post 3

Post 1

Lorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLoremLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLoremLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLoremLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLoremLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLoremLorem ipsum dolor sit amet, consectetur adipe isicing elit, sed do they eiusmod tempor incidin dunt ut labore et doloreLorem