மூன்று இதழ்களை கொண்ட செயற்கைப் பூ

செயற்கையாக ஒன்று ஆக்கவேண்டுமெனில் இயற்கையாக ஒரு பொருளை உதாரணமாக கொண்டுதான் செய்ய முடியும்.  அந்த வகையில் செயற்கையாக ஒரு மலரை செய்ய வேண்டுமெனில் இயற்கையாக இருக்கும் ஒரு மலரை எடுத்து தான் அதனைச் செய்ய முடியும். மலரென்றால் அடிப்படையாக ஒரு மலருக்கு இருப்பது இதழ், மொட்டு, காம்பு, இலை சில மலர்களுக்கு இவையனைத்தும் சிலவற்றில் மேலே குறிப்பிட்டவற்றில் இல்லாமலும் இருக்கலாம்.

தனிதனியாக இந்த பாகங்களை செய்து வைத்து அதை இறுதியில் ஒன்றிணைப்பது தான் பெரும்பாலோனோரின் முறையாக இருக்கிறது எனவே அதையே பின்பற்றலாம்.

மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற மலர் ஒன்றை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மலருக்காக சிவப்பு கிரேப் பேப்பரும் இலைக்காக பச்சை கிரேப் பேப்பரும் காம்பிற்காக கம்பியையும், இதை நேர்த்தியாக்க நூலும் பச்சை கம்டேப்பும் இதை செய்வதற்கு போதுமானது.

கைவினைஞர் ஆகலாம்,

இதழ்களைச் செய்ய சிவப்பு நிற கிரேப் பேப்பரை எடுத்து விருப்பமான இதழ் மாடல்களை இணையத்தில் இருந்து பார்த்து அதன்மேல் வரைந்து கொள்ளவும். பின் கூர்மையான கத்திரிக்கோலைப் பயன்படுத்தி நேர்த்தியாக நறுக்கிக் கொள்ளவும்.

இதே போன்று 3 இதழ்களை நறுக்கிக் கொள்ளவும். பச்சை கிரேப் பேப்பரை எடுத்து இலை வடிவத்தில் (2 பீஸ்) நறுக்கிக் கொள்ளவும்.

கம்பியை பூ காம்பிற்காக 5” நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை கம் டேப்பால் அதை சுற்றிக் கொள்ளவும். பின் கம்பியின் ஒரு நுனியை கொக்கிபோல் வளைத்துக் கொள்ளவும் அதில் இதழைக் கம்பியில் இணைக்க வேண்டும். படத்தில் காட்டியவாறு இதழை கம்பியுடன் வைத்து நூலால் கட்டிக் கொள்ளவேண்டும்.

ஏற்கனவே உருவாக்கிய இலைகளை காம்புடன் இணைக்க பக்கவாட்டாக இரண்டு கம்பிகளை எதிரெதிர் திசைகளில் இணைக்க வேண்டும். பக்கவாட்டுக் கம்பியை காம்புடன் இணைக்க பச்சை கம் டேப்பை பயன்படுத்த    வேண்டும்.

இதே போல் 5 இதழ்களை கொண்டை பேசிக் செயற்கை மலர்களை தயாரிக்கலாம்.

செயற்கை மலர்கள் செய்ய வேண்டுமா? கீழ்காணும் பொருட்கள் இருந்தால் போதும்

இல்லத்தரசிகள் தங்களின் ஓய்வு நேரத்தை போக்க வழியின்றித் தவிக்கிறீர்களா? தங்கள் வீட்டை இன்னும் அழகுப் படுத்த விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் சம்பாதிக்கும் எண்ணம் இருக்கிறதா? டைம் பாஸ் பண்ண வழியின்றித் தவிக்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை நிறைவேறவேண்டுமெனில் இதை மட்டும் செய்யுங்கள்.

மலர்கள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பெண்களாக மட்டும் தான் இருப்பார்கள். சிலருக்கு சில மலர்களின் வாசனை ஒவ்வாது. அதற்காகவே செயற்கை மலர்கள் இருக்கின்றன. அத்தகைய செயற்கை மலரை செய்வது கடினமான காரியம் ஒன்றும் இல்லை.

மேலும் பெண்களைப் பொறுத்தவரையில் ஒருவர் பயன்படுத்தும் மாடலை நாம் பயன்படுத்தக் கூடாது என்கிற எண்ணம் பெரும்பாலும் உண்டு. கடைகளில் பெரும்பாலும் ஒரேவிதமான டிசைன்களில் தான் கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆகையால் தனக்கான தனித்தன்மையை நிரூபீக்க கைவினைப் பொருட்களை மிகக் குறைந்த செலவில் தாங்களாகவே தயாரிக்கக் கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்தத் தொடரைக் கட்டாயம் வாசியுங்கள்.

இந்தக் கட்டுரையில் செயற்கை மலர்கள் எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

செயற்கை மலர்கள் செய்யத் தேவையான பொருட்கள்

1) காகிதம் – கிரேப், டபுள் கிரேப், மெல்லிய கைதுடைக்கும் தாள்,

2) துணி  – சாட்டின், சில்க்  ஆர்கண்டி, மெழுகு, நெட்டி ஸ்டாக்கிங் சோப் வெல்வெட்

போன்ற பொருட்களில் செயற்கை மலர்களைச் செய்தால் ஒரு சிறப்பான டிசைன்களில் கிடைக்கும்.

உபகரணங்கள்:

1)2 கூர்மையான கத்திரிக்கோல்கள் – காகிதம் வெட்ட-1, துணி வெட்ட – 1

2) ப்ளையர் – கம்பிகளை வெட்ட, முறுக்கிவிட பயன்படும்.

3) ஃப்ளோரல் டேப் – வெள்ளை, பச்சை, சிவப்பு என பலவண்ணங்களில் கிடைக்கும். இதற்கு பதில் கிரேப் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரும் பயன்படுத்தலாம்