அவெஞ்சர்ஸில் ஏ.ஆர் முருகதாஸ்….

அவெஞ்சர்ஸின் அடுத்தப்பாகம்  ஏப்ரல் 26ம் தேதி வெளிவர இருக்கிறது. உலகம் முழுக்க இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழ் வெர்சனுக்கான வசனகர்த்தா யார் என்பதை டிஸ்னி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் வசனங்களை எழுத பிரபல இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸை நியமித்துள்ளனர். தமிழில் பல வெற்றி படங்களை அளித்துள்ள ஏ.ஆர் முருகதாஸுக்கு உலக சினிமாவில் சிறந்த அங்கீகாரமாக இந்த வாய்ப்பு பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் கருத்து தெரிவிக்கையில் மார்வெல்லின் மிகப்பெரிய ரசிகர் தான் எனவும், அவரது படைப்புகளின் ஒட்டு மொத்தமாக கருதப்படும் அவெஞ்சர்ஸ் பாகத்திற்கு வசனம் எழுதுவது மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன்.

படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில விஷயங்களை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் கிஸ் அடித்தேன் பிரபல மாடல் வாக்குமூலம்

தனது வாழ்க்கைக் குறிப்புகளை புத்தகமாக பிரபலங்கள் எழுதுவது வழக்கம். அதில் அவர்கள் சர்ச்சையான விஷயங்களை எழுதுவதும்  அதனால்  சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையானதாக மாறியுள்ளது

அந்த வகையில் நடிகையும் மாடலுமான சோபியா ஹயாத் தனது சுயசரிதைக் குறிப்பில்  கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா குறித்து சர்ச்சையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தன்னை லண்டன் கிளப்பில் ரோஹித் சர்மா சந்தித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு முத்தம் அளித்தார். பின் இருவரும் கிளப்பில் நடனம் ஆடினோம்.நான் அவரை விரும்பினேன். வெளிப்படையாக சொல்வதற்கு எனக்கு அப்போது தைரியமில்லை.

ஆனால் அதற்குள் எல்லாம் மாறிவிட்டது நாங்கள் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதற்கு பதிலளித்த  ரோஹித் சர்மா சோபியா ஹயாத் எனது ரசிகை மட்டுமே எங்களுக்கு வேற எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்

இதனால் சோபியா ஹயாத் தனது விருப்பத்தை தெரிவிக்காமலேயே ரோஹித் சர்மா மீதான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முன்னகர்ந்தார்.

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா முத்தச் சர்ச்சையில் சிக்கியிருப்பது மீடூ ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மீண்டும் இணையும் அஜித் வெங்கட் பிரபு காம்போ ; மங்காத்தா 2 வில் இணைவார்களா

அஜித்   நடிப்பில்  மாஸாக   நிறைய  படங்கள்  வெளிவந்தாலும்   ரசிகர்களுக்கு பிடித்த  முக்கியமான படங்களில்   ஒன்றாக இருப்பது  மங்காத்தா படம் தான்.மங்காத்தா படத்தின் இயக்குனரான  வெங்கட் பிரபு அஜித்துடன் சேர்ந்து எடுத்த  ஒரே  ஒரு படம்  இதுவே ஆகும்  .  இந்த படத்தின்  யுவன்சங்கர்  ராஜாவின்   பிஜிஎம்  பாடல்  ரசிகர் மத்தியில் பெரும்  வரேவேற்பை பெற்றது  .

இப்பொழுது  ஒரு படம்  வெற்றி அடைந்தால் அந்த படத்தின்  இரண்டாம் பாகம் வெளிவருவது  தற்போது  வழக்கமாக  உள்ளது. அந்த வரிசையில் 2 .௦  , பாகுபலி 2 , மாரி -2 , சென்னை 28  -2   போன்ற  படங்கள்  தற்போது  சமீபத்தில் வெளியானவை  . வெங்கட் பிரபு இவரது இயக்கத்தில்  கடைசியாக வெளிவந்த படம்  சென்னை 28  -2  ஆம் பாகம்  .இவரது இயக்கத்தில்   அடுத்தபடியாக பார்ட்டி வெளிவருகிறது.

இந்நிலையில் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த  மங்காத்தா படம் மெகா ஹிட்  ஆனது. இதனையடுத்து  அஜித்  ரசிகர்கள்  மங்காத்தா 2 படம்  எப்போது  வெளி வரும்  என்று கேட்ட கேள்விக்கு    இயக்குனர் வெங்கட் பிரபு   தனியார்  நிகழ்ச்சி  ஒன்றில் பங்கேற்ற போது பதிலளித்தார்.   மங்காத்தா 2 படத்தில்  எதிர்பார்ப்பு  அதிகமாக  இருந்தாலும்  , அதன் மீதான பயமும்   அதிகமாக  உள்ளது  என்றும் கூறியுள்ளார் . ஆனால்  அஜித்துடன் என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளிவரும்  என   அவர்  கூறியுள்ளார்  என்பது குறிப்பிடத் தகுந்தது  .

 

 

 

புதிய பெயருடன் இணைந்த வர்மா படத்தின் போஸ்டர்

நடிகர் விக்ரமின்  மகன் துருவ் விக்ரமின்  நடிப்பில்  தயாரிக்கப்பட்ட  ‘வர்மா ‘ படம் .இது  தெலுங்கில்  விஜய் தேவர்கொண்டா  நடிப்பில் வெளிவந்த   அர்ஜுன் படத்தின்  ரிமேக்  ஆகும் .

வர்மா படம் தெலுங்கில் உள்ள  அர்ஜுன் ரெட்டியை போல  இல்லை  என இந்த படத்திலிருந்து    இயக்குனர்  பாலாவை    படக்குழு நீக்கியது . அதோடு மட்டுமல்லாமல்  வர்மா படத்தை  முதலில் இருந்து   எடுக்கப்படும் என படக்குழு   சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது .

மேலும் இந்த படத்தின் இயக்குனராக  அர்ஜுன் பட இயக்குனர்  சந்தீப் வாக வர்மா படத்தை இயக்கவுள்ளார்    ,இந்த நிலையில்  படத்தின் கதாநாயகியாக  முகேஷ் மேத்தாவை  மாற்றிய படக்குழு தற்போது  பணித்தா சந்துவை கதாநாயகியாக  மாற்றியுள்ளது  படக்குழு . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்தும்  நடித்துள்ளதாக   படக்குழு தெரிவித்தது .

 

இந்த நிலையில்   ‘ வர்மா’ படத்தை  பெயர் மாற்றி  ‘ஆதித்ய வர்மா’  என்று  ஒரு போஸ்டர்  வெளியாகியுள்ளது  . இந்த படத்தில் இன்னும் என்னென்ன  மாற்றங்கள் செய்துள்ளனர் என்பதை  நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

 

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த தகவல்

சமீபத்தில் வெளியான  ஜெயம் ரவியின்  அடங்கமறு படம்  புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியானது.  ஜெயம்ரவி எப்போதும்  எடுக்கும் சாயலில் தான் இந்தப் படம் அவருக்கு அமைந்துள்ளது.

அடங்க மறு படத்திக்கு பின், ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை,வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ‘ஐசரி கே’ கணேஷ் தயாரிக்கவிருக்கிறார். ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகவுள்ளது.

இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார். முன்னதாக மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா  இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா  இசையமைத்த  தனி ஒருவன் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது போல இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும்  கூடியுள்ளது .

ஆர்.ஜே. பாலாஜி – விஷ்ணு விஷால் ட்விட்டரில் காரசார மோதல்

நடிகர்  ஆர்  .ஜே  .பாலாஜியின் நடிப்பில்  வெளிவரவுள்ள   எல் .கே. ஜி படத்தை  இயக்குனர் பிரபு தயாரித்துள்ளார்  .  எல் .கே .ஜி படம்  திரைக்கு வருகிற 22  ஆம் தேதி வெளி   வரவுள்ள நிலையில்  , ரசிகர்கள் மத்தியில் பெரும் வரேவேற்பை  பெற்றுள்ளது .

இந்த படத்தின்  முதல்  காட்சியாக  5 மணி காட்சியை   திரையிட ரோகிணி  திரையரங்கம் அனுமதி  தந்துள்ளது .இந்த நிலையில் நடிகர் விஷ்ணு   விஷால்    எல் .கே .ஜி  படமானது  5  மணி காட்சி வைத்திருப்பது  இவரக்ளின்  தந்திரமாக   இருக்கும் என  தனது ட்விட்டர்  பக்கத்தில்  வெளியிட்டார்  .

இதற்கு பதிலடி கொடுக்குமாறு ஆர் .ஜே .பாலாஜி   நானும் முதலில்  இந்த   5  மணி காட்சி வைத்திருப்பது   தந்திரம் என்று தான் நினைத்தேன்  பிறகு  திரைப்பட உரிமையாளரிடம் கேட்டறிந்த பிறகு  தான் உண்மை தெரிந்தது ,அது என்ன வென்றால்  இது  எங்களுக்கு  யாருடைய  பரிந்துரையும் இல்லாமல்   எங்களது  தகுதியின் அடிப்படையில்  தான்  கிடைத்தது  என்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார் . விஷ்ணு விஷாலுக்கும்  ,  ஆர் .ஜே .பாலாஜி இருவருக்கும் இடையே  காரசார மோதல் நடைபெற்றது. பின்னர்  இருவரும் ஒரு வழியாக சமாதானம் அடைந்தனர் .

 

 

‘தல-59’ படம் குறித்த தகவல்கள் இதோ

தல அஜித்தின்    விசுவாசம் படத்தை அடுத்து எச்.வினோத்  இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.  ஹிந்தியில்  அமிதா பச்சன், டாப்ஸி  நடித்த  பிங்க்  படத்தின்    ரீமேக்  தான்   தல அஜித்தின்  59  ஆவது படம் .

இந்த  ரீமேக் படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின.

இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார்.

நாளை முதல் 2வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அஜித்தும் தற்போது படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .

காப்பான்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ

நடிகர்  சூர்யா  நடிப்பில்    கடைசியாக திரைக்கு வந்த படம் தானா  சேர்ந்த கூட்டம்  விக்னேஷ்  சிவன்  இயக்கத்தில் வெளியான இந்த படம்  சூப்பர்   ஹிட்டானது ,. தமிழ் சினிமாவை  பொறுத்தவரை   முன்னணி  ஹீரோக்கள்  எல்லாம்  கமர்சியல்  படம்  நடிப்பதில் காட்டும் ஆர்வத்தை   விட  தற்போது சமூக நலனுள்ள  படங்கள்  , அரசியல் சார்ந்த      படங்கள்  போன்றவற்றிலையே  அதிக  ஆர்வம்  செலுத்தி வருகிறார்கள் .

நடிகர் சூர்யாவும்    காவல் துறையினர்    வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில்  சிங்கம்  , காக்க  காக்க  போன்ற படங்களிலும்  ,  கடைசியாக  சூர்யா நடித்த    தானா  சேர்ந்த கூட்டம்  படம் சமூகத்தில்  உள்ள வேலையின்மை  பிரச்னையை  எடுத்துரைத்தது   .    சமீபத்தில்   சூர்யாவின்  அடுத்த  படமான    என் .ஜி.கே  படத்தின்   டீஸர் வெளியாகி மிகவும் வைரலானது .

முழுக்க முழுக்க  அரசியலையே  மையமாக  கொண்டு இந்த படத்தில் சூர்யா, சாய்பல்லவி  ,ராகுல் ப்ரீத்  சிங்  ,மன்சூர் அலி கான் போன்ற பல பிரபலங்கள்  இந்த  படத்தில்  உள்ளன. இது ஒரு புறம் இருக்க  தேச உணர்வை  மையமாக  கொண்டு எடுக்கப்பட்ட காப்பான்’  படத்தை கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  உருவான  இந்த படத்தில்  இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் தேச உணர்வை கொண்டு கதை களம் கொண்ட  படமாக இருப்பதால் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று வெளியிட படக்குழுவினர்  திட்டமிட்டுள்னனர் .

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘கோவா’ பட நடிகர்

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’  என்ற படத்தை  அடுத்து  சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தை  வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் .  கடைசியாக சென்னை 28   இரண்டாம் பாகத்தை  இயக்கியுள்ள வெங்கட் பிரபுவின்  பார்ட்டி படப்பிடிப்பு  முழுவதுமாக  முடிவடைந்து  ரிலீஸ் ஆகாமல் உள்ள நிலையில்  ,இவர் தற்போது சிம்புவை வைத்து  மாநாடு படத்தை  இயக்கவுள்ளார் .

தற்போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் சிம்புவுக்கு  ஜோடியாக  ராஷிகண்ணா   நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் தற்போது ஜெய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் ஏற்கனவே  சிம்புவுடன் ஜெய்  இணைந்து சேர்ந்துள்ள ‘வேட்டை மன்னன் ‘  என்ற  படம் இவர்கள் இருவரும் நடிக்க இருப்பதாகவும் ஆனால்  அந்த படம் எதிர்ப்பாராத  வகையில் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது . இந்த நிலையில் இருவரும் மீண்டும் கைக்கோர்க்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகத்தி தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ படையினர் – அதிர்ச்சியில் படக்குழுவினர்

அட்டகத்தி  படத்தின் மூலம் பிரபலமான  தினேஷை படப்பிடிப்பின் போது கமாண்டோ படையினர்   சுற்றி வளைத்தனர்.   இதனால்  படக்குழுவில் பதற்றம் ஏற்பட்டது  .

அட்ட கத்தி தினேஷ் நடிக்கும் படங்கள்  என்றாலே சமுதாய பார்வையில்    ஒரு வித்யாசமான படைப்பாக இருக்கும்.  தினேஷ் நடித்த வந்த படங்களான அட்டகத்தி, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றைஅழுத்தவும், விசாரணை, அண்ணனுக்கு ஜெய் போன்ற பல படங்கள்  ரசிகர்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் , விருதுகளையும் பெற்றது .

அதிலும் விசாரணை  படத்தின்   மூலம் தினேஷ்   நடிப்பிற்கு  ஒரு புதிய பரிணாமம் கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான  நடிப்பையையும்  ,  நல்ல கதைகளை     இவர் தேர்ந்தெடுப்பதில்   அதிக கவனம்  செலுத்தி வருகிறார் . இவரது அடுத்த படமாக வெளி வர இருக்கும்  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் படப்பிடிப்பு  சென்னையில்   நடந்து கொண்டிருக்கிறது  .

படத்தில்  வர இருக்கும்   ஒரு காட்சியான லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் லாரியின் உள்ளே இருந்து படமாக்கிக் கொண்டிருந்தனர். படத்தளத்தில் பயன்படுத்திய  துப்பாக்கியை பார்த்த கமாண்டோ படையினர்   உண்மையான துப்பாக்கி என்று நினைத்து நடிகர் தினேஷை சுற்றி வளைத்தனர் .

அப்போது அருகிலிருந்த  படக்குழுவினர்கள் பதறி  அடித்து கொண்டு  ஷூட்டிங்  என்று  கூறியவுடனும், தினேஷை   பார்த்துவிட்டு இது  படப்பிடிப்பு  என்று உறுதிப் படுத்திக் கொண்ட கமாண்டோ படையினர் அங்கிருந்து சென்றனர் .