ரோஹித் சர்மாவுடன் கிஸ் அடித்தேன் பிரபல மாடல் வாக்குமூலம்

தனது வாழ்க்கைக் குறிப்புகளை புத்தகமாக பிரபலங்கள் எழுதுவது வழக்கம். அதில் அவர்கள் சர்ச்சையான விஷயங்களை எழுதுவதும்  அதனால்  சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையானதாக மாறியுள்ளது

அந்த வகையில் நடிகையும் மாடலுமான சோபியா ஹயாத் தனது சுயசரிதைக் குறிப்பில்  கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா குறித்து சர்ச்சையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தன்னை லண்டன் கிளப்பில் ரோஹித் சர்மா சந்தித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு முத்தம் அளித்தார். பின் இருவரும் கிளப்பில் நடனம் ஆடினோம்.நான் அவரை விரும்பினேன். வெளிப்படையாக சொல்வதற்கு எனக்கு அப்போது தைரியமில்லை.

ஆனால் அதற்குள் எல்லாம் மாறிவிட்டது நாங்கள் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதற்கு பதிலளித்த  ரோஹித் சர்மா சோபியா ஹயாத் எனது ரசிகை மட்டுமே எங்களுக்கு வேற எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்

இதனால் சோபியா ஹயாத் தனது விருப்பத்தை தெரிவிக்காமலேயே ரோஹித் சர்மா மீதான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முன்னகர்ந்தார்.

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா முத்தச் சர்ச்சையில் சிக்கியிருப்பது மீடூ ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *