சுண்டல் பக்கோடா

தேவையான பொருட்கள்:

அவித்த சுண்டல்                           : 1 கப்

அரிசி மாவு                                     : 1 கப்

கடலை மாவு                                   : 1 கப்

நறுக்கிய வெங்காயம்                : 1 கப்

கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சை மிளகாய் , பெருங்காயம் எண்ணெய் தேவையான அளவை எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

வேகவைத்த சுண்டலுடன் அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், ஆகியவற்றை  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து   பிசைந்துகொள்ளவும்.

கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். பக்கோடா போடுவது போல் உதிரியாக மாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்தால் சூடான சுவையான சுண்டல் பக்கோடா ரெடி.

மருத்துவப் பயன்கள்:

மாரடைப்பு காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்கிறது. கர்ப்பிணிகளுக்குத் தேவையான அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. குளுக்கோஸை அதிகரிப்பதால்  சர்க்கரை நோய்க்கு உகந்ததாக இருக்கும். இரத்தசோகை, வயிறு சார்ந்த பிரச்சினைகள், போன்ற பிரச்சினைகளுக்கு கொண்டக்கடலை சிறந்தது. ஒரு நாளுக்குத் தேவையான கலோரிகளில் 30 சதவீதத்தை கொண்டக்கடலை தருகிறது.

சத்துக்கள்: அதிக புரதம்,  நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், செலோனியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம்.

சாமை ஆப்பம்

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி                           : 100 கிராம்

உளுந்து                                     : 15 கிராம்

வெந்தயம்                                : 1 ட்யூஸ்பூன்

தேங்காய்த் துருவல்            :  50 கிராம்

உப்பு                                            : தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் குறைந்தது 8 மணிநேரம் ஊற  வைக்க வேண்டும். ஊறிய அரிசி உளுந்து வெந்தயத்தை நன்கு மழிய அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுக் கலவை புளிப்பதற்கு எட்டு மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளும். எனவே காலையில் அரிசியை ஊறவைத்தால் மாலை அல்லது இரவு அரைத்து மறுநாள் காலை புளித்துவிடும். புளித்த மாவை எடுத்து ஆப்பக் கடாயில் ஆப்பத்தை சுட்டால் சாமை அரிசி ஆப்பம் தயார்.

ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால் நன்றாக இருக்கும். கேரளா போன்ற இடங்களில் கொண்டைக்கடலை குருமாவையும் ஆப்பத்திற்கு பயன்படுத்துவார்கள்.

மருத்துவ பலன்கள்:

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அரிசியை விட ஏழுமடங்கு நார்ச்சத்துகளை கொண்டது. நீரிழிவு நோய் உள்ளவர்களும், நீரிழிவு நோய் வருவதை விரும்பாதவர்களும் சாமையை நாடுவது நலம் பயக்கும்.

அனைத்து நோய்களுக்கும் மூலதானமாக கருத்தப்படும் மலச்சிக்கலுக்கு இது மிகப்பெரிய தீர்வை தருகிறது. உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை எளிமையாக வெளியேற்றுகிறது. இரத்தசோகையை நீக்குகிறது. வளரும் பருவ பெண்கள் சாமையை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சத்துக்கள்:  நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுப்பொருட்களின் ஊக்கி,

வரகு அடை பிரட்டல்

தேவையான பொருட்கள்

வரகு அரிசி                                      : 1 கப்

கடலை பருப்பு                               : ½ கப்

பாசிப்பருப்பு                                 : ½ கப்

வரமிளகாய்                                    : 4

சீரகம்                                                : 1 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல்                    : 4 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்                            : 2

இஞ்சி                                                   : சிறு துண்டு

தயிர்                                                    : 1 கப்

பெ. வெங்காயம்                           : 1

கடுகு                                                 : தேவையான அளவு

கருவேப்பிலை                               : தேவையான அளவு

 

சமைக்கலாம் வாங்க:

வரகு அரிசியையும், பருப்பையும் தனியாக நான்கு மணிநேரமும் ஊற வைத்து, வர மிளகாய், சீரகம் சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை தோசைக்கல்லில் அடையாக ஊற்றி பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துக் கொள்ளவும். ஊற்றிய அடையை சிறு சிறு துண்டுகளாக ஆக்கிக் அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலுடன் பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலையைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி என்ணெய் காய்ந்தவுடன் கடுகு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துள்ள அடைத்துண்டுகளை கடாயில் கொட்டி நன்றாக கிளற வேண்டும். சிறுது நேரம் கழித்து அரைத்து வைத்த தேங்காய்க் கலவை விழுதுகளை சேர்த்து பச்சை வாசம் போகும்வரை கிண்டவும். கடைசியாக தயிரைச் சேர்த்து கடாயை இறக்கிவிடலாம்.

வரகு அடையை ஒரு கப் அல்லது பவுலில் எடுத்து அதன் மீது அழகுக்காக சில கொத்தமல்லி இழைகளை மேலாக தூவி, பரிமாறுங்கள்.

 

மருத்துவப் பலன் அறிக:

வரகு அரிசி:

சிறுதானியங்களில் தனித்துவம் பெற்றதாக வரகு இருந்து வருகிறது.  தற்போதைய சூழலில் அதிகமாக பயன்படுத்தும் அரிசி கோதுமையை விட வரகு சிறந்ததாக வரகரிசி காணப்படுகிறது. உடல் எடையை குறைக்கப்பயன்படுகிறது. மாதவிடாயில் பிரச்சினையுடைய பெண்கள் வரகைச் சமைத்து உண்டுவர தீர்வு கிடைக்கும். உடலில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டு வலியால் அவதிப்படுவர் வரகை நாடுவது நல்லது.

சத்துக்கள்