சாம்சங் கேலக்சி ஃபோல்ட் ஆறு கேமரா, இரண்டு பேட்டரி,மடித்து பயன்படுத்தக் கூடிய அலைபேசி சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் இந்த மொபைல் 4ஜி, 5ஜி என்று இரண்டு மாடல்களிலும் வெளிவர இருக்கிறது. இதன் விலை 1980 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் ரூபாய்.
சிறப்பம்சங்கள்:
இந்த போன் மடித்த நிலையில் 4.6” கொண்ட சாதரண மொபைல் போல் காட்சியளிக்கும்.மடித்த போனை விரித்தால் 7.3” டாப்லெட்டாக மாறி காட்சியளிக்கும். எனவே இதன் சிறப்பம்சமாக இரட்டை உயர ஸ்கீரின் வெசிலிட்டியை பயன்படுத்தி தேவைக்கேற்ப உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மொபைலில் 7NM பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சாம்சங் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெமரியில் ஒரு புரட்சியையே பண்ணியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 12 ஜிபி RAMமையும், 512 ஜிபி மெமரியையும் பெற்றுள்ளது.
இதில் இரண்டு பேட்டரிகள் உள்ளன. மொத்தம் 4830MAH திறனைக் கொண்டுள்ளது.
இதில் மொத்தம் 6 கேமராக்கள் உள்ளது. 16 எம்பி கொண்ட அல்ட்ரா ஒயிட் கேமராவையும் 12 எம்பி ஒயிட் ஆங்கிள் கேமராவையும் 12 எம்பி கொண்ட டெலி போட்டோ கேமராவையும் பின்புறமும் இரண்டு கேமராக்கள் இன்னுமொரு திரையிலையும் 10 எம்பி கொண்ட முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இதில் 3 செயலிகளை பயன்படுத்த முடியும்.
சாப் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் பச்சை, வெள்ளி, நீலம், கருப்பு கலர்களில் மொபைல்கள் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் வெளியிடப்படும் என்றும் பிறகு ஐரோப்பிய நாடுகளில் விற்றபின்னர் மற்ற நாடுகளுக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.