ஹிந்தி மீடியம் இரண்டாம் பாகத்தில் முழுமையாக விலகிய இர்ஃபான் கான் மற்றும் இயக்குனர் சகாத் சௌத்ரி

இர்ஃபான் கான் அவர்  இந்தியாவுக்கு திரும்புவதற்கு  இயலாத  நிலையில்  உள்ளார்  ,ஏனென்றால் அவர்  உயிருக்கு அச்சுறுத்தும் நோய்க்கு சிகிச்சை  பெற்றுவருவதாக  கூறிவருகின்ற நிலையில்  .இர்ஃபான் கானுடைய நடிப்பில்   சில ஆண்டுக்கு முன்னர்   வெளிவந்த மிக பெரியளவில்  வெற்றி அடைந்த  படங்களின்  வரிசைகளில் ஒன்றாக ஹிந்தி மீடியம்   அவருக்கு அமைந்தது .ஹிந்தி மீடியம்  2  படத்தை   எடுக்க படக்குழு  திட்டமிட்டுள்ளனர்.

ஆனால்  படக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில்  இர்ஃபான் கான் மீண்டும்  ஹிந்தி மீடியம்  2 பகுதியில் அவர்  நடிப்பதற்கான தகவல்களை  இப்போது வெளியிட முடியாது என படக்குழுவினர் கூறியுள்ளார்கள் .

அதே வகையில் இர்ஃபான் கான்  தரப்பிலிருந்து  வெளிவந்த  தகவல் என்றால்  அவர் உடல் நலம்  முழுவதுமாக குணமான பின்  தான் நடிப்பார் என்றும்      கூறியுள்ளார்கள் .

இதற்கிடையில், ஹிந்தி மீடியம் படத்தின்  இயக்குனர் சகாத் சௌத்ரி  இது குறித்து அவர் கூறியதாவது ,ஹிந்தி மீடியம் 2  கதையிலிருந்து முற்றிலும் விலகி விட்டதாக  கூறியுள்ளார் .

இந்த நிலையில் ஹிந்தி மீடியம்  2  படத்தின்  நடிகர் ,இயக்குனர்கள்  குறித்த தகவல்களை எல்லாம் நாம் பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும் .

 

 

 

 

அபிஷேக் பச்சனுக்கு ஜோடியான நித்தியா மேனன்

 

தற்போது உள்ள காலகட்டத்தில்  நடிகர், நடிகைகள்  திரை படத்தில் நடிக்கும்  காட்டும்  ஆர்வத்தை  காட்டிலும்    வெப் சீரிஸ் நடிக்க  பெரிதளவு  ஆற்வம் காட்டுகின்றனர் . ஏனெனில்  இளைஞர்கள் மத்தியில்      வெப் சீரிஸ்  தொடரே  பெரிதளவில்   வரேவேற்பை  பெற்றதுள்ளது .தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு  நடிகர்  நடிகைகள்    இந்த  வெப் சீரிஸ்  தொடர்களில்  நடிப்பதில்  மிகுந்த  ஆர்வம் காட்டிவருகின்றனர் .

திரைப்படங்கள்  எப்படி வெற்றியடைந்து  பார்ட் 1 , பார்ட் -2  என்று  படம் எடுக்கிறார்களோ  ,அந்த வகையில் வெப் சீரிஸ்  தொடரும் தற்போது  வெற்றி அடைந்த  தொடர்களை    பார்ட் 1 , பார்ட் -2  என வெளிவருகின்றது .

 

 

 

அந்த வகையில்   மாதவன்  நடிப்பில் வெளியான’ ப்ரீத்’  என்ற  வெப் சீரிஸ்    மிக பெரிய அளவில் வெற்றி அடைந்ததையொட்டி  அதன் இரண்டாம்  பக்கம் தற்போது  எடுக்க உள்ளனர் .முழுக்க முழுக்க   இந்த  வெப் சீரிஸ்  தொடரானது  சைக்காலஜிக்கல்  திரில்லராக  உருவாகி வரும்  இதனை மாயான்க் ஷர்மா  இயக்கவுள்ளார் . ‘ ப்ரீத்’  முதல் பாகத்தில் நடித்த அமித் சத்  போலீஸ் கதாபாத்திரத்தில்  நடிக்கிறார் .

 

 

மேலும் இந்த வெப்  சீரிஸ் இரண்டாம்  பாகத்தில்  நித்யாமேனன் மற்றும்  அபிஷேக்  பச்சன்  இருவரும்  முக்கிய கதாபாத்திரத்தில்   நடிக்க உள்ளாராம்  , இந்த  வெப் சீரிஸ் தொடர் கிட்டத்தட்ட  200  நாடுகளுக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

அபிஷேக் பச்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டின் முன்னணி பிரபல கதாநாயகியான  ஐஸ்வர்யா  ராய்  இவர்   தனது  கணவரான   நடிகர்  அபிஷேக்  பச்சனுக்கு  ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் .

 

பொதுவாக ஒரு  மனைவி தன்னுடைய  கணவனது   பிறந்தநாளை  கொண்டாடுவதில்  ஒரு தண்ணி அழகு  தான்.தங்களது  அன்பு  வெளிபடுமாறு  தான்  அவர்கள் தேடி தேடி  பரிசளிப்பார்கள்  , அதிலும்  பிரபலங்கள்   பிறந்த நாள் கொண்டாடுவது  ஒரு தனி அழகு தான்   .

 

 

அந்த வரிசையில்   உலக பிரபலம் புகழ் பெற்ற  நடிகை  ஐஸ்வர்யா   ராய்  தன்னுடைய  கணவரின் பிறந்தநாளை   வித்தியாசமாக  வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா  ராய் தனது  அன்பை வெளிப்படுத்தும் வகையில்  இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்  தன்னுடைய கணவரான  அபிஷேக் பச்சனின்  சிறு  வயது புகைப்படத்தை    பகிர்ந்தார் , அந்த புகைப்படத்தோடு  ‘ ஹேப்பி  பர்த் டே  மை  பேபி  ‘  என்று தனது  காதலோடு  பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த  அபிஷேக் பச்சன்  தனது மனைவியின்    காதலோடு  கூடிய  வாழ்த்தை    பார்த்து மிகுந்த  இன்ப அதிர்ச்சியில்  சென்றுள்ளார் .

 

தற்போது உள்ள காலகட்டத்தில்    திருமணமாகி சில தினங்களிலேயே   அவர்களுக்கு  உள்ள காதல் காணாமல்  போய் விடுகிறது ,ஆனால்  பிரபல  ஜோடியான ஐஸ்வர்யா  ராய் ,அபிஷேக்  பச்சனுக்கு  திருமணமாகி  பன்னீரெண்டு ஆண்டுகள்  கடந்தாலும்  இவர்களுக்குள்  இருக்கும் அன்பு இன்னும் குறையாமல்  இருக்கிறது என்பது  குறிப்பிடத்தகுந்தது .

அக்ஷய் குமார் வீட்டில் நள்ளிரவில் நடந்த சம்பவம் கைது செய்த போலீசார்

நடிகர் ,நடிகைகள்  ,கிரிக்கெட்  வீரர்கள் போன்ற பிரபலங்களோடு ரசிகர்கள்  புகைப்படம் எடுத்து கொள்வது , அவர்களுடன் சேர்ந்து வீடியோ எடுப்பது  போன்றவை  ரசிகர்கள்  பொதுவாக  செய்யும்  விஷயங்களில்  ஒன்றுதான் .

ஆனால் இங்கு  ஒரு நடிகரின்   ரசிகர் அந்த நடிகர்  மீது வைத்திருந்த  அன்பினால் அவருக்கு  ஏற்பட்ட   விபரீதம் என்னவென்றால் பாலிவுட்டின்      பிரபல நடிகரான  அக்ஷய்குமார்  ரசிகர்  அவருடன் சேர்ந்து  நடிக்கவேண்டும்  என்ற ஆசையில் நேர்ந்த விபரீதம்  தான் .

அரியானாவில்  உள்ள  அக்ஷய்குமார் அவர்  வீட்டில் இருந்த போது அவரை பார்க்க வேண்டும்   என்ற ஆசையில்  வீட்டின் முன்பு வந்தார் . ஆனால் அந்த ரசிகரை அக்ஷய்குமார்  வீட்டின்  காவலாளி அனுமதி மறுத்ததை  அடுத்து  நள்ளிரவு  இரண்டு மணிக்கு  அத்துமீறி  அக்ஷய்குமார் வீட்டில் குதித்தார்  .அக்ஷய்குமார் உடன்  சேர்ந்து நடிக்க வேண்டும்  என்ற ஒரே  ஒரு ஆசையில்  குதித்த அந்த அக்ஷய்குமார்  ரசிகரை போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

 

அக்ஷய்குமார் மீது  ரசிகர்கள்  நன்மதிப்பு  வைத்துள்ள நிலையில் ,அவரது ரசிகரை  கைது செய்யும் போது  அவர் மௌனம் காத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது .

 

தற்போது சல்மான்கானின் புதிய தோற்றம் ;

சல்மான்கானின்  அடுத்த படமான’ பாரத்’ படத்தை விரைவில்  முடிக்கும் நோக்கில்  கடுமையாக உழைத்து வருகிறார். சுனில் க்ரோவர், கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷிராஃப் மற்றும் தபூ ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் .

இந்தப் படத்தின் இறுதிக் கால படப்பிடிப்பு பணிகள்  மிக விரைவாக  நடைபெற்றுவருகிறது . சல்மான் கான் வெவ்வேறு காலங்களுக்கு  ஏற்ப ஐந்து வித்தியாசமான தோற்றத்தை கொண்டு இந்த படத்தின்  கதைக்களம் அமைந்துள்ளது .

கதைக்கு ஏற்ற வித்தியாசமான தோற்றத்திற்கு ஏற்றவகையில் தங்கள் உடல்வாகை மாற்றிக் கொள்ள  வேண்டும் என நடிகர் நடிகைகள் கடுமையாக  உழைக்கின்றனர் .அந்த வகையில் சல்மான் கான் சமீபத்தில்  வெளியிட்ட  பிளாக் அண்ட் வைட்  புகைப்படத்தில்  அவர்  கடுமையாக  உடற்பயிற்சி செய்தது வெளியானது .   அதில் மிகக்  கடுமையான தசைநார் ஆயுதங்களுடன் எடுத்த படம்  வெளியானது .

இந்தத் திரைப்படம், ஓடி டு மை பாதர் என்ற  கொரிய படத்தின் ரீமேக் ஆகும்,  சல்மான் கான் ஏற்கனவே  நடித்த தபாங்  படத்தில்  கடுமையான  உடல்கட்டுடன்  இருந்தார்  என்பது குறிப்பிடத்தகுந்தது .

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் இயக்கிய அத்துல் அக்னிஹோதிரின் ரீல் லைஃப்    புரொடெக்ஷன் பிரைவேட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. லிமிடெட் மற்றும் புஷான் குமாரின் டி-சீரிஸ் மற்றும் ஈத் 2019 இல் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 

 

 

அவெஞ்சர்ஸில் ஏ.ஆர் முருகதாஸ்….

அவெஞ்சர்ஸின் அடுத்தப்பாகம்  ஏப்ரல் 26ம் தேதி வெளிவர இருக்கிறது. உலகம் முழுக்க இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழ் வெர்சனுக்கான வசனகர்த்தா யார் என்பதை டிஸ்னி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் வசனங்களை எழுத பிரபல இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸை நியமித்துள்ளனர். தமிழில் பல வெற்றி படங்களை அளித்துள்ள ஏ.ஆர் முருகதாஸுக்கு உலக சினிமாவில் சிறந்த அங்கீகாரமாக இந்த வாய்ப்பு பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் கருத்து தெரிவிக்கையில் மார்வெல்லின் மிகப்பெரிய ரசிகர் தான் எனவும், அவரது படைப்புகளின் ஒட்டு மொத்தமாக கருதப்படும் அவெஞ்சர்ஸ் பாகத்திற்கு வசனம் எழுதுவது மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன்.

படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில விஷயங்களை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் கிஸ் அடித்தேன் பிரபல மாடல் வாக்குமூலம்

தனது வாழ்க்கைக் குறிப்புகளை புத்தகமாக பிரபலங்கள் எழுதுவது வழக்கம். அதில் அவர்கள் சர்ச்சையான விஷயங்களை எழுதுவதும்  அதனால்  சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையானதாக மாறியுள்ளது

அந்த வகையில் நடிகையும் மாடலுமான சோபியா ஹயாத் தனது சுயசரிதைக் குறிப்பில்  கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா குறித்து சர்ச்சையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தன்னை லண்டன் கிளப்பில் ரோஹித் சர்மா சந்தித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு முத்தம் அளித்தார். பின் இருவரும் கிளப்பில் நடனம் ஆடினோம்.நான் அவரை விரும்பினேன். வெளிப்படையாக சொல்வதற்கு எனக்கு அப்போது தைரியமில்லை.

ஆனால் அதற்குள் எல்லாம் மாறிவிட்டது நாங்கள் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதற்கு பதிலளித்த  ரோஹித் சர்மா சோபியா ஹயாத் எனது ரசிகை மட்டுமே எங்களுக்கு வேற எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்

இதனால் சோபியா ஹயாத் தனது விருப்பத்தை தெரிவிக்காமலேயே ரோஹித் சர்மா மீதான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முன்னகர்ந்தார்.

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா முத்தச் சர்ச்சையில் சிக்கியிருப்பது மீடூ ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மீண்டும் இணையும் அஜித் வெங்கட் பிரபு காம்போ ; மங்காத்தா 2 வில் இணைவார்களா

அஜித்   நடிப்பில்  மாஸாக   நிறைய  படங்கள்  வெளிவந்தாலும்   ரசிகர்களுக்கு பிடித்த  முக்கியமான படங்களில்   ஒன்றாக இருப்பது  மங்காத்தா படம் தான்.மங்காத்தா படத்தின் இயக்குனரான  வெங்கட் பிரபு அஜித்துடன் சேர்ந்து எடுத்த  ஒரே  ஒரு படம்  இதுவே ஆகும்  .  இந்த படத்தின்  யுவன்சங்கர்  ராஜாவின்   பிஜிஎம்  பாடல்  ரசிகர் மத்தியில் பெரும்  வரேவேற்பை பெற்றது  .

இப்பொழுது  ஒரு படம்  வெற்றி அடைந்தால் அந்த படத்தின்  இரண்டாம் பாகம் வெளிவருவது  தற்போது  வழக்கமாக  உள்ளது. அந்த வரிசையில் 2 .௦  , பாகுபலி 2 , மாரி -2 , சென்னை 28  -2   போன்ற  படங்கள்  தற்போது  சமீபத்தில் வெளியானவை  . வெங்கட் பிரபு இவரது இயக்கத்தில்  கடைசியாக வெளிவந்த படம்  சென்னை 28  -2  ஆம் பாகம்  .இவரது இயக்கத்தில்   அடுத்தபடியாக பார்ட்டி வெளிவருகிறது.

இந்நிலையில் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த  மங்காத்தா படம் மெகா ஹிட்  ஆனது. இதனையடுத்து  அஜித்  ரசிகர்கள்  மங்காத்தா 2 படம்  எப்போது  வெளி வரும்  என்று கேட்ட கேள்விக்கு    இயக்குனர் வெங்கட் பிரபு   தனியார்  நிகழ்ச்சி  ஒன்றில் பங்கேற்ற போது பதிலளித்தார்.   மங்காத்தா 2 படத்தில்  எதிர்பார்ப்பு  அதிகமாக  இருந்தாலும்  , அதன் மீதான பயமும்   அதிகமாக  உள்ளது  என்றும் கூறியுள்ளார் . ஆனால்  அஜித்துடன் என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளிவரும்  என   அவர்  கூறியுள்ளார்  என்பது குறிப்பிடத் தகுந்தது  .

 

 

 

புதிய பெயருடன் இணைந்த வர்மா படத்தின் போஸ்டர்

நடிகர் விக்ரமின்  மகன் துருவ் விக்ரமின்  நடிப்பில்  தயாரிக்கப்பட்ட  ‘வர்மா ‘ படம் .இது  தெலுங்கில்  விஜய் தேவர்கொண்டா  நடிப்பில் வெளிவந்த   அர்ஜுன் படத்தின்  ரிமேக்  ஆகும் .

வர்மா படம் தெலுங்கில் உள்ள  அர்ஜுன் ரெட்டியை போல  இல்லை  என இந்த படத்திலிருந்து    இயக்குனர்  பாலாவை    படக்குழு நீக்கியது . அதோடு மட்டுமல்லாமல்  வர்மா படத்தை  முதலில் இருந்து   எடுக்கப்படும் என படக்குழு   சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது .

மேலும் இந்த படத்தின் இயக்குனராக  அர்ஜுன் பட இயக்குனர்  சந்தீப் வாக வர்மா படத்தை இயக்கவுள்ளார்    ,இந்த நிலையில்  படத்தின் கதாநாயகியாக  முகேஷ் மேத்தாவை  மாற்றிய படக்குழு தற்போது  பணித்தா சந்துவை கதாநாயகியாக  மாற்றியுள்ளது  படக்குழு . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்தும்  நடித்துள்ளதாக   படக்குழு தெரிவித்தது .

 

இந்த நிலையில்   ‘ வர்மா’ படத்தை  பெயர் மாற்றி  ‘ஆதித்ய வர்மா’  என்று  ஒரு போஸ்டர்  வெளியாகியுள்ளது  . இந்த படத்தில் இன்னும் என்னென்ன  மாற்றங்கள் செய்துள்ளனர் என்பதை  நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

 

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த தகவல்

சமீபத்தில் வெளியான  ஜெயம் ரவியின்  அடங்கமறு படம்  புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியானது.  ஜெயம்ரவி எப்போதும்  எடுக்கும் சாயலில் தான் இந்தப் படம் அவருக்கு அமைந்துள்ளது.

அடங்க மறு படத்திக்கு பின், ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை,வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ‘ஐசரி கே’ கணேஷ் தயாரிக்கவிருக்கிறார். ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகவுள்ளது.

இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார். முன்னதாக மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா  இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா  இசையமைத்த  தனி ஒருவன் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது போல இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும்  கூடியுள்ளது .