அவெஞ்சர்ஸில் ஏ.ஆர் முருகதாஸ்….

அவெஞ்சர்ஸின் அடுத்தப்பாகம்  ஏப்ரல் 26ம் தேதி வெளிவர இருக்கிறது. உலகம் முழுக்க இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழ் வெர்சனுக்கான வசனகர்த்தா யார் என்பதை டிஸ்னி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் வசனங்களை எழுத பிரபல இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸை நியமித்துள்ளனர். தமிழில் பல வெற்றி படங்களை அளித்துள்ள ஏ.ஆர் முருகதாஸுக்கு உலக சினிமாவில் சிறந்த அங்கீகாரமாக இந்த வாய்ப்பு பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் கருத்து தெரிவிக்கையில் மார்வெல்லின் மிகப்பெரிய ரசிகர் தான் எனவும், அவரது படைப்புகளின் ஒட்டு மொத்தமாக கருதப்படும் அவெஞ்சர்ஸ் பாகத்திற்கு வசனம் எழுதுவது மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன்.

படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில விஷயங்களை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.