கரும்புள்ளிகள் நீங்க சூப்பர் டிப்ஸ் ;

பெண்களுக்கு  தங்களது  அழகை கெடுக்கும்  வகையில்   அமைவதில்  முக்கிமான ஒன்றாக  இருப்பது  கரும்புள்ளி பிரச்சனை தான் . இவை நமது  உடலில்  ஏற்படும் ஜீன் மாற்றத்தினாலோ   அல்லது சத்து குறைபாட்டினால்  ஏற்படுகின்றன  .   எண்ணெய் பிசுக்கள்   அதிகமாக    இருப்பதால்   பருக்கள்  உண்டாகின்றன  ,நாளடைவிலே  அவை   கரும்புள்ளிக்காக    மாறிவிடுகின்றன  .  இந்த   கரும்புள்ளியை  விரைவில்  போக  சூப்பரான   டிப்ஸை   பார்க்கலாம் .

 

ரோஜா  இதழ்களுடன்   பாதாம் பருப்பை  ஊற வைத்து  அரைத்து  முகத்தில்  தடவி வர வேண்டும்  .

 

அப்படி முடியா  இயலாதவர்கள்  பப்பாளி பழம்  சிறிது  தேன் கலந்து  குழைத்து  முகத்த்தில்  தடவி வரலாம் .  பப்பாளி பழம்  இல்லையென்றால்  வாழைப்பழம்   அரைத்து முகத்தில் பூசி  கொள்ளலாம் .

 

 

வெள்ளரி சாறு ,புதினா சாறு  ,எலுமிச்சை  பழச்சாறு  ஆகியவைகளை   சம அளவில்  கலந்து  முகத்திலுள்ள  கரும்புள்ளிகள் மீது  தேய்த்து  வந்தால் கரும்புள்ளிகள்  போய்விடும் .

 

உருளைக்கிழங்கை  இரண்டாக   வெட்டி  கரும்புள்ளிகள் மீது  தடவி வர அவை  மறைந்து விடும் .

 

ஜாதிக்காயை  அரைத்துப் போட்டால்  கரும்புள்ளி  நீங்கும் .

 

முகத்தில்  வெண்ணை  தடவி  எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரால்  ஆவி பிடித்து   துண்டால்   முகத்தை அழுத்தி துடையுங்கள்  .தொடர்ந்து   இப்படி செய்துவர  கரும்புள்ளி மறையும் .

 

வெள்ளரி சாறு  ,போரிக் பவுடர் தலை 1  டீஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகளில் தடவி 5 நிமிடம் ஊறவிடவும் ,பிறகு லேசாக  மசாஜ்  செய்து துடைத்தாள் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும் .

 

கோதுமை ,தவிடு ,பால்  இரண்டும் தலா ஒரு  டேபிள் ஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில  தடவி  வர வேண்டும்  .கொஞ்ச  நாட்களில்  கரும்புள்ளிகள் வலுவிழந்து  உதிர்ந்து  விடும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *