பெண்களுக்கு தங்களது அழகை கெடுக்கும் வகையில் அமைவதில் முக்கிமான ஒன்றாக இருப்பது கரும்புள்ளி பிரச்சனை தான் . இவை நமது உடலில் ஏற்படும் ஜீன் மாற்றத்தினாலோ அல்லது சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்றன . எண்ணெய் பிசுக்கள் அதிகமாக இருப்பதால் பருக்கள் உண்டாகின்றன ,நாளடைவிலே அவை கரும்புள்ளிக்காக மாறிவிடுகின்றன . இந்த கரும்புள்ளியை விரைவில் போக சூப்பரான டிப்ஸை பார்க்கலாம் .
ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும் .
அப்படி முடியா இயலாதவர்கள் பப்பாளி பழம் சிறிது தேன் கலந்து குழைத்து முகத்த்தில் தடவி வரலாம் . பப்பாளி பழம் இல்லையென்றால் வாழைப்பழம் அரைத்து முகத்தில் பூசி கொள்ளலாம் .
வெள்ளரி சாறு ,புதினா சாறு ,எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும் .
உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகள் மீது தடவி வர அவை மறைந்து விடும் .
ஜாதிக்காயை அரைத்துப் போட்டால் கரும்புள்ளி நீங்கும் .
முகத்தில் வெண்ணை தடவி எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரால் ஆவி பிடித்து துண்டால் முகத்தை அழுத்தி துடையுங்கள் .தொடர்ந்து இப்படி செய்துவர கரும்புள்ளி மறையும் .
வெள்ளரி சாறு ,போரிக் பவுடர் தலை 1 டீஸ்பூன் கலந்து கரும்புள்ளிகளில் தடவி 5 நிமிடம் ஊறவிடவும் ,பிறகு லேசாக மசாஜ் செய்து துடைத்தாள் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும் .
கோதுமை ,தவிடு ,பால் இரண்டும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில தடவி வர வேண்டும் .கொஞ்ச நாட்களில் கரும்புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும் .