கரும்புள்ளிகள் நீங்க சூப்பர் டிப்ஸ் ;

பெண்களுக்கு  தங்களது  அழகை கெடுக்கும்  வகையில்   அமைவதில்  முக்கிமான ஒன்றாக  இருப்பது  கரும்புள்ளி பிரச்சனை தான் . இவை நமது  உடலில்  ஏற்படும் ஜீன் மாற்றத்தினாலோ   அல்லது சத்து குறைபாட்டினால்  ஏற்படுகின்றன  .   எண்ணெய் பிசுக்கள்   அதிகமாக    இருப்பதால்   பருக்கள்  உண்டாகின்றன  ,நாளடைவிலே  அவை   கரும்புள்ளிக்காக    மாறிவிடுகின்றன  .  இந்த   கரும்புள்ளியை  விரைவில்  போக  சூப்பரான   டிப்ஸை   பார்க்கலாம் .

 

ரோஜா  இதழ்களுடன்   பாதாம் பருப்பை  ஊற வைத்து  அரைத்து  முகத்தில்  தடவி வர வேண்டும்  .

 

அப்படி முடியா  இயலாதவர்கள்  பப்பாளி பழம்  சிறிது  தேன் கலந்து  குழைத்து  முகத்த்தில்  தடவி வரலாம் .  பப்பாளி பழம்  இல்லையென்றால்  வாழைப்பழம்   அரைத்து முகத்தில் பூசி  கொள்ளலாம் .

 

 

வெள்ளரி சாறு ,புதினா சாறு  ,எலுமிச்சை  பழச்சாறு  ஆகியவைகளை   சம அளவில்  கலந்து  முகத்திலுள்ள  கரும்புள்ளிகள் மீது  தேய்த்து  வந்தால் கரும்புள்ளிகள்  போய்விடும் .

 

உருளைக்கிழங்கை  இரண்டாக   வெட்டி  கரும்புள்ளிகள் மீது  தடவி வர அவை  மறைந்து விடும் .

 

ஜாதிக்காயை  அரைத்துப் போட்டால்  கரும்புள்ளி  நீங்கும் .

 

முகத்தில்  வெண்ணை  தடவி  எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரால்  ஆவி பிடித்து   துண்டால்   முகத்தை அழுத்தி துடையுங்கள்  .தொடர்ந்து   இப்படி செய்துவர  கரும்புள்ளி மறையும் .

 

வெள்ளரி சாறு  ,போரிக் பவுடர் தலை 1  டீஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகளில் தடவி 5 நிமிடம் ஊறவிடவும் ,பிறகு லேசாக  மசாஜ்  செய்து துடைத்தாள் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும் .

 

கோதுமை ,தவிடு ,பால்  இரண்டும் தலா ஒரு  டேபிள் ஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில  தடவி  வர வேண்டும்  .கொஞ்ச  நாட்களில்  கரும்புள்ளிகள் வலுவிழந்து  உதிர்ந்து  விடும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இயற்கை முறையில் அழகு சேர்க்க;

உடற்பயிற்சி  செய்தாலோ  ,காஸ்மெடிக்ஸ்  பயன்படுத்தியோ   அழகுப்படுத்தும்  பெண்களுக்கு    ஏகப்பட்ட பின்விளைவை  ஏற்படுத்தும்  .இயற்கை மருத்துவ குறிப்புகளை   யாரையும் எதிர்பார்க்காமல்  ,நாம் பயன்படுத்துவதோடு  மட்டுமல்லாமல்  எந்த ஒரு பின்விளைவையும்  ஏற்படுத்தாது .அதற்கான வலி முறைகளை பார்க்கலாம் .

முடி நன்றாக வளர ;

முடி  செழித்து  வளர  வாரம்  ஒரு முறை   வெண்ணெயை தலைக்கு தடவி  ஒரு மணி நேரம் கழித்து அலசி  வந்தால்  முடி  நன்றாக வளரும்.

கருவளையம் நீங்க ;

கண்களை  சுற்றியுள்ள  கருவளையம்   நீங்க   வெள்ளரிக்காய்  ஜுசை பஞ்சில்  நனைத்து   கண்கள் மீது தினமும்  போட்டு வரவும் .

உதடு  வசீகர  தோற்றம் பெற ;

உதடு   வசீகரமாக  இருக்க  முட்டையில்  வெண்கரு   ,பதம் பவுடர் ,பால் இம்மூன்றையும்  கலந்து   உதட்டில் தடவி  அது காய்ந்ததும்   சூடு நீரில்  கழுவி விட வேண்டும் .

முகம் பொலிவு  பெற ;

உருளைக்கிழங்கை  இடித்து  சாறு பிழிந்து ,சமமாக  தென் கலந்து  முகத்தில்  தடவினால்  முகம் அழகுபெறும் .

 

முகச்சுருக்கம்  நீங்க ;

முகத்தில் உள்ள சுருக்கம்  மறைய  முட்டையின்  வெண்கருவை  தடவுங்கள் ,சிறிது நேரம்  கழித்து  முகம் கழுவ  முகத்திலுள்ள  சுருக்கம் மறையும் .

கருமை நீங்க ;

கருமையடைந்த    முகம் பொலிவு  பெற    பாதாம் பருப்பை   பாலில் அரைத்து  இரவில் முகத்தில் தொடர்ந்து  பூசிவர பொலிவு பெறும்.

 

முக வறட்சி  நீங்க ;

முகத்தில்  வறட்சி அகல   பச்சை கொத்தமல்லி   அல்லது  புதினாவை  நன்றாக  அரைத்து   முகத்தில்  பூசி  பிறகு சிறிது  நேரம்  கழித்து அலம்ப  வேண்டும் .

 

முகப்பரு  நீங்க ;

முகப்பருக்கள்  போக  பூண்டு அல்லது கருந்துளசியை   அரைத்து  போட நாளடைவில் பருக்கள்  மறையும் .

 

வாய் நாற்றம் நீங்க ;

வாய் துர்நாற்றம்   நாம் பேசும் பொது  உண்டாகும்  ,எப்போதும்   புத்துணர்வோடு  இருக்க  வேண்டுமென்றால்  , புதினை கீரையை  காயவைத்து  போடி செய்து   பல் துலக்கி வந்தால் புத்துணர்வோடு இருப்பதோடு மட்டுமல்லாமல்  பல் வெண்மையாக இருக்கும் .

 

பல் வெண்மையாக இருக்க;

பல்  வெண்மையாக இருக்க   இரவு  நேரத்தில்  தினமும் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன்  பல் வெண்மை பெறும்.

 

உதடு  ஷைனிங்  பெற ;

உதடு  வறண்டு  காணப்படுகிறதோ ,அதை போக்கி   ஷைனிங் பெற தினமும்  உதட்டின் மேல்  தேங்காய் எண்ணெய்  தடவி வந்தால்  ஷைனிங்  தோற்றறை பெறும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

முடி வளருவதற்கான மிக எளிய டிப்ஸ்

 

ஊட்டசத்தான  உணவு  ;

ஊட்டசத்துக்கள்  அடங்கிய  உணவு வகைகளை  தேர்ந்தெடுத்து சாப்பிட்டு  வந்தாலும்  முடி உதிர்வது குறையத்  தொடங்கும்  .குறிப்பாக  பொன்னாங்கண்ணி ,கரிசலாங்கண்ணி ,வல்லாரை ,அகத்திக்கீரை  உள்ளிட்ட  கீரை வகைகளும்  ,சப்போட்டா மற்றும் நாகப்பழம்  போன்றவையும்  சாப்பிட்டு வர கூந்தல் உதிர்வது குறைவதோடு  நன்றாக  வளரவும்  தொடங்கும் .அதோடு கருவேப்பில்லை நெல்லிக்காய் சாப்பிடுவதும்  நல்லது .

 

 

சூடான  ஆயில்  மசாஜ் ;

முடி  உதிர்வதைத்  தடுக்கவும்  அதை  நன்கு வளர செய்யவும்  காய் கொடுக்கும் எளிய  ட்ரீட்மெண்ட்  சூடான  ஆயில்  மசாஜ்  தான் சிறந்த  முறை . தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் அல்லது ஆலிவ்  எண்ணெய் இவற்றில் எதையாவது ஒன்றாய்   சுமார் ஆறு டேபிள்  ஸ்பூன்   எடுத்து   லேசாக  சூடுபடுத்தி  கொள்ளுங்கள் .வெதுவெதுப்பான   இந்த எண்ணெய்யை  தலையில் ஊற்றி இரண்டு கைகளாலும்  நன்றாக  மசாஜ்  செய்ய வேண்டும் .

 

 

மசாஜ் எப்படி செய்வது ?

தலையில் சீராக  எண்ணெய்  தடவியதும்  உங்கள்  விரல் நுனிகளால்  தலை  முழுவதும்  சின்ன சின்ன வட்டங்களாக  மசாஜ்  செய்து விடுங்கள் . ஒரு முறை  மேலிருந்து  கீழ்  நோக்கியும்  மற்றொரு  முறை  கீழிருந்து  மேல்  நோக்கியும்   இதே போல மசாஜ்  செய்ய  வேண்டும் .இப்படி செய்யும் போது  முடியை  கசக்கவோ  ,சிக்காகவோ  கூடாது .

 

தலைக்கு  பரவலாக  மசாஜ் செய்து  முடிந்ததும்  நெற்றியில்  பொட்டு வைக்கும் இடத்தில  சுட்டு   விரலால்  வட்ட வடிவில்  தேய்த்து அழுத்தம் தாருங்கள்  .அடுத்ததாக   நெற்றி பொட்டுக்கும்  பிறகு   மேல்  நெற்றியிலும்  , உச்சியிலும்  பின் மண்டையிலும் ,கடைசியாக   காதின்  பின்புறமுள்ள  குழி  பகுதிகளிலும்  இதே போல  வட்ட வடிவில்  விரல்களால்   மாசாஜ் செய்ய வேண்டும்  ,ஒவ்வொரு  பகுதியிலும்  குறைந்து இருபது  முறை  மசாஜ்  செய்துவிட வேண்டும்  .

மசாஜ் செய்து முடித்ததும்  வெந்நீரில்   டர்க்கி   டவல்  ஒன்றை நன்றாக நனைத்து பிழிந்து  அதில் கூந்தலை  மொத்தமாக   அள்ளி தலையின் உச்சியில்  முடிந்து கொள்ளுங்கள் ,இதே போல மூன்று  முறை   செய்து   வந்தால்   தலையில்  தடவியுள்ள   எண்ணெய் உள்ளுக்குள்   எளிதாக  இறங்கும் .வாரத்துக்கு   இரண்டு  முறை இப்படி    தலைக்கு  சீயக்காயையோ  அல்லது  தரமான  ஷாம்பூவையோ தடவி குளிக்க வேண்டும் .

குறிப்பு ; அதிகப்படியான சூட்டை  வெளியேறவிடாமல் உள்ளே  அதிக நேரம்  தங்கச் செய்யும்  தன்மை   டர்க்கி  டவலுக்கு உள்ளதால்  டான்  இதை  நாம் பயன்படுத்துகிறோம் .

 

 

தேவையற்ற முடியை அகற்ற

தேவையற்ற ரோமங்களால்   பெண்களுக்கு ஏகப்பட்ட மனக்குழப்பம்  ஏற்படுகிறது .அடுத்தவர்களுக்கு  அசிங்கமாக  தெரியுமே  என்று  நினைத்து கொண்டு  நான்கு பேருக்கு  மத்தியில்   செல்லவே  கவலைப்படுவார்கள் .

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த   நிவாரணம் அளிக்கும் முறையை  பயன்படுத்தினால் அனாவசியமான ரோமங்களை  அகற்ற  செய்யலாம் .ஆனால் அதில் ஒரு  சிக்கல் இருக்கிறது  அது என்னவென்றால்  தொடர்ந்து ‘ ஷேவிங் ‘ செய்ய  வேண்டிய  நிர்பந்தம்  ஏற்படும் ,’ஹேர்  ரீமாவின் ‘ க்ரீம்களும்  முழுமையான  நிவாரணம் தருவதில்லை .இருப்பவைகளில் சிறந்த வழி ‘வாக்சிங்’ செய்வதே .தொடர்ந்து   ‘வாக்சிங்’  செய்தால்பலன் கிடைக்கும்  .அதுவும் நாம் வீட்டில் இருந்தே  அதை செய்யலாம்  , அதற்கான  வழிமுறை  என்னவென்பதை  தெரிந்து  கொள்ளலாம் .

 

 

தேவைப்படும்  பொருட்கள் ;

 

சர்க்கரை  – 500 கிராம்

எலுமிச்சை சாறு  – 3 பழத்தினுடையது

கிளிசரின்  – 1  1 /2 தேக்கரண்டி

 

செய்முறை  ;

 

எலுமிச்சை பழச்சாற்றில்   சர்க்கரையை  சேர்க்கவும்  .லேசான சூட்டில்  10  முதல் 15 நிமிடம்   அந்த கலவையை  வைக்கவும்  .தேன் நிறத்தில்  அது  கெட்டியாகும் பொது கிளிசரின் சேர்த்து  இறக்கவும் .இந்த கலவையை முடி உள்ளங்காலில்  சூட்டோடு  தேய்க்கவும் .பின்பு நீளமான   காட்டன் துணியால் இறுக்கவும்  . கலவை  ஆறியதும்  ரோமம்  வளந்திருக்கும்   திசைக்கு   தக்கபடி  துணியை  இழுத்து  எடுங்கள்.

குறிப்பு ;பியூட்டி பார்லருக்கு   சென்று ஒன்று  அல்லது  இரண்டு  முறை செய்த பின்பே  சுயமாக   வாக்சிங்  செய்யலாம் .அதுவே   சரியான  முறைப்படி செய்வதாக  இருக்கும் .

முகத்தில்  வளர்ந்துள்ள   மூடியை  அகற்ற  மஞ்சள் பொடி  ,கடலை மாவு,பன்னீர்  ஆகிய  மூன்றையும்  கூழ் போல கலந்து  முகத்தில்  அழுத்தி தேய்க்க  வேண்டும் .அடிக்கடி  இப்படி  செய்வதால் தேவையற்ற   முடி  உதிர்ந்துவிடும் .

உடல் எடையை குறைக்க உதவும் எட்டு வழிகள்

நம் அன்றாட  வேலைகளை செய்யவும் ,உடல் உறுப்புகள்  இயங்கவும் ,நமக்கு  சக்தி  தேவைப்படுகிறது .இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் வாயில் தான் கலோரி  கிடைக்கிறது . அதனை கலோரி  என்ற  அளவிடால்  அளவிடுகிறார்கள் .ஆனால்  நாம்  எடுத்து  கொள்ளும் உணவு  உடல் கலோரி செலவிடும் சக்தியை  காட்டிலும் அதிகமாகும் போது ,உடல்  கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது .

சில பேர்  அதிகமாக  உணவு உண்டாலும்  அவர்களின்  உடல்  ஏறவே  ஏறாது , அதே போல   சில பேருக்கு  உணவு உண்ணாமல் இருந்தாலும் அவர்களுக்கு   எடை அதிகரித்து கொண்டே இருக்கும்,இந்த கேள்விக்கான  பதில்  என்னவென்றால் ,இந்த கொழுப்பு  அதிகரித்து செல்வதாலே  நமது உடல் எடை  அதிகமாகும் .ஆனால் மிக சிலருக்கு  மட்டும் ஹார்மோன்   காரணங்களால்   உடல் எடை குறையும் , சில பேருக்கு  பருமனும்  அதிகரிக்கின்றன .

 

ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட  இந்த வழிமுறையை  பயன்படுத்தினாலே  குறைந்தது மாதம் 4 கிலோ  எடை  குறைவது  மிக உறுதி .

 

எழுந்தவுடன் தண்ணீர் பருக வேண்டும் ;

தினசரி  காலை  எழுந்தவுடன்  ஒன்று அல்லது  இரண்டு  டம்ளர்   தண்ணீர் பருகி  வர வேண்டும் . இரவு நேரங்களில் அதிக  அளவில்  தண்ணீர் பருகாமல் இருப்பது நல்லது .காலையில் எழுந்தவுடன் வெறும்  வயிற்றில்  தண்ணீரை குடித்தால்  ஏகப்பட்ட  நன்மைகள்  உண்டாகும் .

 

உடற்பயிற்சி  செய்வதால்  ஏற்படும் நன்மைகள் ;

தினமும்  குறைந்தது  35  நிமிடம் உடற்பயிற்சி ,வேகநடை ,ஸ்பாட்  ஜாக்கிங்  , கைகளின் ,ஸ்கிப்பிங்  போன்றவையோ அல்லது இதர பயிற்சிகள் செய்து  வரவும் . இதை நமது  உடலில் உள்ள  கொழுப்புகளை  கரைக்க உதவுகின்றன .

 

உடற்பயிற்சி செய்யும் போது எடுத்து கொள்ளகூடிய  ஜூஸ்  வகைகள் ;

உடற்பயிற்சி செய்யும் போது நாம் தினமும்  பிரெஷாக   வெண்பூசணி அரைத்து  சர்க்கரை இல்லாமல்  சாறை பருகவும் . வெண்பூசணி பிடிக்காதவர்கள்  வாழைத்தண்டு  சாறை    குடிக்கவும் . இதை  தினசரி பருகி  வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம் .

 

டீ,காப்பி  பருகும் போது  கடைபிடிக்க வேண்டியவை ;

காப்பி  , டீ அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள் ,அதில் பால் சேர்ப்பதற்கு  பதிலாக   காப்பி  அல்லது  டீயில்   எலுமிச்சை சாறு

பிழிந்து அருந்தலாம் .பால் சேர்த்து  அருந்துபவர்களாக  இர்ருந்தால் பாலை 3 -4  முறை காய்ச்சி  ஆடை  நீக்கிய   பின் பயன்படுவது  நல்லது .முடிந்தவரை   சர்க்கரையை தவிர்பது நல்லது.

 

 

  காலை  எடுத்து  கொள்ள கூடிய  உணவு   வகைகள் ;

 

நன்றாக வெண்ணை  எடுத்த  மோர்   தினமும்  காலையில்  எழுந்தவுடன்  குடித்து  வரவும் . வெறும் மோர் மற்றும் எடுத்து கொள்ளாமல் அதனுடன்  கொய்யா  கனியை  சாப்பிட்டு  வரலாம் . பிறகு   காலையில்  நாம் சாப்பிடும் பொது  வெண்ணை தடவாத   ரொட்டி ,ஸாண்டவிச் அல்லது  இதில் இரண்டு  எடுத்து  கொள்ளலாம் .

 

மத்திய  உணவு எடுத்து கொள்ளும்  உணவு  வகைகள் ;

இரண்டு கரண்டி  ஏதேனும் ஒரு வகை கீரையையும்  அதனுடன்  2 கரண்டி நீர்சத்து   அதிகமுள்ள  காய்கறிகளான  வெண்பூசணி அல்லது  புடலங்காயுடன் பருப்பு சேர்த்து  தேங்காய்  சேர்க்காமல்  கூட்டு  ,1  கரண்டி  சாம்பாருக்கு  ஒரு  கப்  சாதம்  அல்லது  எண்ணெய் சேர்க்காத

இரண்டு  கோதுமை சப்பாத்தி  ,1  கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது 1 டம்ளர்  மோரை  எடுத்து கொள்ளலாம் .

 

இரவு  உணவில் எடுத்து கொள்ளக்கூடியவை ,

வேக வைத்த காய்கறிகள் 3 கப்  அல்லது  சூப் பப்பாளி  அல்லது ஆரஞ்சு  அல்லது பைன் ஆப்பிள் 6 துண்டு அல்லது கொய்யா 3 துண்டு .

 

நாம் அன்றாட வாழ்வில்  கடைபிடிக்க வேண்டியவை ;

பச்சை  காய்கறிகள் சாலட் ,பகலில் உறங்குவதை   தவிர்ப்பது நல்லது .எண்ணெய்  பதார்த்தங்களை   மற்றும்   நொறுக்குத் தீனிகளை   தவிர்கவும் .உப்புள்ள  ஆதாரங்களை   அதாவது  ஊறுகாய் ,சிப்ஸ் ,உப்பு ,பிஸ்கட்  தவிர்க்கவும்  .இரவில்  உண்ட பின்னர்  குறுநடை   செய்த பின்னர் உறங்க செல்லவும் .’இளைத்தவனுக்கு  எள்ளு கொழுத்தவனுக்கு  கொள்ளு ‘ என்ற பழமொழிக்கு   ஏற்ப  காலையில்  கொள்ளு  கஞ்சி கொடுப்பது  நல்லது .