Poll 2

1 2 ( 33.33 % )
2 4 ( 66.67 % )

Poll1

சாம்சங் கேலக்சி ஃபோல்ட்

சாம்சங் கேலக்சி ஃபோல்ட் ஆறு கேமரா, இரண்டு பேட்டரி,மடித்து பயன்படுத்தக் கூடிய அலைபேசி சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் இந்த மொபைல் 4ஜி, 5ஜி என்று இரண்டு மாடல்களிலும் வெளிவர இருக்கிறது. இதன் விலை 1980 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் ரூபாய்.

சிறப்பம்சங்கள்:

இந்த போன் மடித்த நிலையில் 4.6” கொண்ட சாதரண மொபைல் போல் காட்சியளிக்கும்.மடித்த போனை விரித்தால் 7.3” டாப்லெட்டாக மாறி காட்சியளிக்கும். எனவே இதன் சிறப்பம்சமாக இரட்டை உயர ஸ்கீரின் வெசிலிட்டியை பயன்படுத்தி தேவைக்கேற்ப உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மொபைலில் 7NM பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சாம்சங் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெமரியில் ஒரு புரட்சியையே பண்ணியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 12 ஜிபி RAMமையும், 512 ஜிபி மெமரியையும் பெற்றுள்ளது.

இதில் இரண்டு பேட்டரிகள் உள்ளன.  மொத்தம் 4830MAH திறனைக் கொண்டுள்ளது.

இதில் மொத்தம் 6 கேமராக்கள் உள்ளது. 16 எம்பி கொண்ட அல்ட்ரா ஒயிட் கேமராவையும் 12 எம்பி ஒயிட் ஆங்கிள் கேமராவையும் 12 எம்பி கொண்ட டெலி போட்டோ கேமராவையும் பின்புறமும் இரண்டு கேமராக்கள் இன்னுமொரு திரையிலையும் 10 எம்பி கொண்ட முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இதில் 3 செயலிகளை பயன்படுத்த முடியும்.

சாப் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் பச்சை, வெள்ளி, நீலம், கருப்பு கலர்களில் மொபைல்கள் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் வெளியிடப்படும் என்றும் பிறகு ஐரோப்பிய நாடுகளில் விற்றபின்னர் மற்ற நாடுகளுக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புள்ளிகள் நீங்க சூப்பர் டிப்ஸ் ;

பெண்களுக்கு  தங்களது  அழகை கெடுக்கும்  வகையில்   அமைவதில்  முக்கிமான ஒன்றாக  இருப்பது  கரும்புள்ளி பிரச்சனை தான் . இவை நமது  உடலில்  ஏற்படும் ஜீன் மாற்றத்தினாலோ   அல்லது சத்து குறைபாட்டினால்  ஏற்படுகின்றன  .   எண்ணெய் பிசுக்கள்   அதிகமாக    இருப்பதால்   பருக்கள்  உண்டாகின்றன  ,நாளடைவிலே  அவை   கரும்புள்ளிக்காக    மாறிவிடுகின்றன  .  இந்த   கரும்புள்ளியை  விரைவில்  போக  சூப்பரான   டிப்ஸை   பார்க்கலாம் .

 

ரோஜா  இதழ்களுடன்   பாதாம் பருப்பை  ஊற வைத்து  அரைத்து  முகத்தில்  தடவி வர வேண்டும்  .

 

அப்படி முடியா  இயலாதவர்கள்  பப்பாளி பழம்  சிறிது  தேன் கலந்து  குழைத்து  முகத்த்தில்  தடவி வரலாம் .  பப்பாளி பழம்  இல்லையென்றால்  வாழைப்பழம்   அரைத்து முகத்தில் பூசி  கொள்ளலாம் .

 

 

வெள்ளரி சாறு ,புதினா சாறு  ,எலுமிச்சை  பழச்சாறு  ஆகியவைகளை   சம அளவில்  கலந்து  முகத்திலுள்ள  கரும்புள்ளிகள் மீது  தேய்த்து  வந்தால் கரும்புள்ளிகள்  போய்விடும் .

 

உருளைக்கிழங்கை  இரண்டாக   வெட்டி  கரும்புள்ளிகள் மீது  தடவி வர அவை  மறைந்து விடும் .

 

ஜாதிக்காயை  அரைத்துப் போட்டால்  கரும்புள்ளி  நீங்கும் .

 

முகத்தில்  வெண்ணை  தடவி  எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரால்  ஆவி பிடித்து   துண்டால்   முகத்தை அழுத்தி துடையுங்கள்  .தொடர்ந்து   இப்படி செய்துவர  கரும்புள்ளி மறையும் .

 

வெள்ளரி சாறு  ,போரிக் பவுடர் தலை 1  டீஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகளில் தடவி 5 நிமிடம் ஊறவிடவும் ,பிறகு லேசாக  மசாஜ்  செய்து துடைத்தாள் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும் .

 

கோதுமை ,தவிடு ,பால்  இரண்டும் தலா ஒரு  டேபிள் ஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில  தடவி  வர வேண்டும்  .கொஞ்ச  நாட்களில்  கரும்புள்ளிகள் வலுவிழந்து  உதிர்ந்து  விடும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் மார்பங்களை பாதுகாக்க சில டிப்ஸ் ;

எப்போதும்  இறுக்கமாக பிரா அணியாதீர்கள் .உடற் பயிற்சியின் போது  தளர்வான  அளவில்   ‘பிராக்களை ‘ அணியுங்கள் .

பிராக்களை கைகளால்   துவையுங்கள்  .வாஷிங்  மெஷின்  அடித்து  துவைத்தால்  அவற்றின் உருவம்  ,அமைப்பு மாறிவிடும் .

 

கர்ப்பகாலத்தில் அடிப்பாகத்தில்   இழை வைத்து தைக்கப்பட்ட பிராக்களை தவிருங்கள்.ஸ்பெஷல்  ஆகா  வடிவமைக்கப்பட்ட வசதியான ,தாங்கக்கூடிய  ,பொருந்தக்கூடிய  அளவில்  பிராக்களை வாங்குங்கள்  .

 

பெரிய மார்பகங்களை  உடையவர்கள் நன்கு தூக்கி  நிறுத்தக்கூடிய  பிராக்களை  அணியுங்கள் .

 

80  சதவீத   பெண்கள் – சரியான  அளவில்லாத  பிரா அணிவதால்  தோள்பட்டை  ,முதுகுவலியால்  அவதியுறுகின்றனர்  .

 

ஒரு நாளைக்கு   12  மணி நேரத்துக்கு  மேல் தொடர்ந்து ‘பிரா’ அணியாதீர்கள்  .பிராவின் அளவை சிறியதாக   அணிந்து  -இருக்கி அதன் மூலம்  மார்பகங்களை   சிறிய  அளவாக்காதீர்கள் .

 

இதற்கு பதிலாக -மினி மைலார் பிரா  அணியலாம்  .மார்பகங்களின்  அளவு ஒரு செ.மீ  வரை  சுருங்கி  டிஜிஓற்றமளிக்க செய்யும் .

 

சிறிய மார்பகங்களை   உடையவர்கள்  சாதாரணமாக  அல்லது பெரியதாக   தோற்றமளிக்க   செய்ய  அடியில்  துணிவைத்து  தைக்கப்பட்ட பாடெட் பிரா  அணியுங்கள் .

 

எப்போதாவது  தான் ‘நாடா’ இல்லாத பிராக்களை  அணிய வேண்டும் .

கண்ணனுக்கு தெரியக்கூடிய  விதம்  ‘பிரா லைன்’ அமையாமல்  கவனமாக  பார்த்து கொள்ளுங்கள் .

 

உதாரணமாக  வெள்ளை  ரவிக்கையின்  கீழ் வெள்ளை நிற  பிராவை  அணியாதீர்கள்  .உடற்பயிற்சி  மூலம்  மார்பகங்கள்  தோற்றம் வடிவாவதுடன் மார்பக  புற்றுநோயிலிருந்து   பாதுகாத்து  கொள்ளலாம் .

அடி வயிற்று சதையை குறைக்க வேண்டுமா ;

 

பொதுவாக  பெண்ணாக இருந்தாலும் சரி  ஆண் என்றாலும் சரி  மிக  பெரிய  அளவில்  தொந்தரவாகவும்  ,பல பேருடைய  கேலி  கிண்டலுக்கும் ஆளாகுவது   வீண்  அடிவயிற்று  சதையாக தான் இருக்கும். உடனடியாக  தீர்வும்  தர வேண்டும்   என்பதற்காக  பணம்  வீணாகுவதோடு  மட்டுமல்லாமல்   ,  தேவையில்லாத   தொந்தரவுகளை  சந்திக்கின்றனர்.’  நோகாமல் நொங்கு  கும்பிடமுடியாது  என்று  பழமொழிக்கு  ஏற்றவாறு  நாம்   சிறுது  கடுமையான  முற்சிகளை  செய்வதில்   எந்த ஒரு  தவறுமில்லை . அந்த வகையில்  நம் அழகை  கெடுக்கும்  வகையிலும் உடலுக்கு   எந்த ஒரு பாதிப்பும்  தராத வகையில்   பின்பற்றக்கூடியப வழிமுறையை   தெரிந்து கொள்ளலாம் .

 

உடற்பயிற்சி ,யோகா செய்வது  நம் உடலுக்கு  நல்லது  தருவதோடு  மட்டுமல்லாமல்  நம்  மனதிற்கும்  நிம்மதி தருகிறது  .

தினமும்  உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்   ,வீட்டிலிருந்த யோகா  பயிற்சி மேற்கொள்ளலாம் . இது  நமது  உடல் மேனியை  கட்டுடல்  கலையாமல்  இருக்கும் .

 

 

 

உணவு முறைகளை  கடைபிடிக்கும்  வழிமுறைகள்  ;

 

எலுமிச்சை பழச்சாற்றுடன்    சிறிது  தேன்  கலந்து  பருகலாம் ,இது நமது  அடி வயிறு சதையை  குறைப்பதோடு   மட்டுமலலாமல்   ,  உடலின் இதர சதைகளையும்  குறைக்கும் . பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத  கரு காப்பியை  குடிக்கலாம் . காபி  குடிக்க  பழக்கமில்லாதவர்கள்   இளநீர்  குடிக்கலாம் .  ஆனால் அதனுள் இருக்கும்  தேங்காய்  உண்ண வேண்டாம் .  நாம் முடிந்த வரை  தேங்காயை   பயன்படுத்தாமல்  இருப்பது  நல்லது  . சட்னயில் கூட தேங்காய்   சேர்ப்பதர்க்கு பதிலாக  வெங்காயத்தை சேர்த்து   கொள்ளலாம் .

 

 

உணவில் சேர்த்து  கொள்ளகூடிய  விஷயங்கள் ;

 

பப்பாளி காயை கூட்டு  சேர்த்து  சமைக்கலாம்  அல்லது   பப்பாளி  வைத்து  சாம்பார் செய்து  சாப்பிடலாம் .பப்பாளியை  போன்று  முள்ளங்கியை  சேர்த்து கொள்ளலாம்  . நீர்முள்,நெருஞ்சி முள் ,கொத்தமல்லி ,சோம்பு  எல்லவற்றையும்  சம அளவு   எடுத்து  அதை தூள்  செய்து  டீயில்  ,தேயிலைக்கு  பதில்  சேர்த்து பருகலாம்  .

 

இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறைய ;

ஆமணக்கு  வேரை  நன்றாக  இடித்து  தேன்  கலந்து  பிசைந்து  சிறிது  தண்ணீர்  ஊற்றி   இரவு  முழுவதும்   ஊறவைத்து மறுநாள் நீரை   வடிகட்டி  தினமும்   அரை டம்ளர்   குடித்து வர இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறையும் .

 

உடல் எடை குறைய ,இடுப்பு வலி நீங்க !

 

பிரண்டை  துண்டுகளை ஒடித்து வந்து  ,அதன் தோலை  சீவி சிறு சிறு  துண்டுகளை வேக வைத்து ,அதனை காயா வைத்து   போடி செய்து கொள்ள வேண்டும்  . இந்த பொடியுடன்   ஒரு  தேக்கரண்டி  உப்பு , ஐந்துஎலுமிச்சை   பழச்சாறு   சேர்த்து  மறுபடியும்  உயர்த்தி  எடுத்து கொள்ளவேண்டும்   .தினசரி  இதில்   அரை தேக்கரண்டி   பொடியை உணவுடனோ  ,உணவுக்கு   முன்பு  தண்ணீரிலோ   கலந்து   சாப்பிட  உடல் எடை குறைவதோடு  மட்டுமல்லாமல் , பெண்களுக்கு  ஏற்படும்  பின்  இடுப்பு    வலியும் சரி ஆகும் .

 

மேற்குறிப்பிட்ட எந்த  மருந்துக்கும்  பத்தியம் கிடையாது .அதனால்  பக்க விளைவுகளும்  கிடையாது.

 

கேரளா டாப் 5 சுற்றுலாத் தளங்கள்

தமிழக மக்களிற்கு ஊட்டி கொடைக்கானல் அடுத்து கேரளா மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக இருந்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய காரணமாக கருதுவது இயற்கை எழிலும் குளிர்ந்த காற்றும் தான்.

அதுமட்டுமில்லாமல் இங்குள்ள கார்த்திக்குகள் தன்னுடைய ஜெஸியை தேடி அங்கு விசிட் அடிக்கத் தவறுவதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு இது பேவரட் ஸ்பாட் தான்.

இயற்கை அரசியின் பிராஞ்ச்களில் ஒன்றான கேராளாவில் விசிட் செய்ய ஆசைப்பட்டால் தவறாமல் இந்த இடங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க..

ஆலப்புழா:

ஆலப்புழா என்றால் அனைவருக்கு நினைவுக்கு  வருவது கடற்கரையும் கலங்கரை விளக்கமும் தான் அனைவருக்கும் நியாபகம் வரும். அதை விட மிக முக்கியமானது போட் ஹவுஸ்கள் தான். ஊட்டியின் எழிலைக் காண மலை இரயில்கள் எப்படி இயக்கப்படுகிறதோ அதற்கு ஈடாக கேராளவின் எழிலைக்  காண ஆலப்புழா போட் ஹவுஸ் சவாரிகள் இயக்கப்படுகின்றன. படுக்கை அறைகள் உணவு, குளிக்கும் வசதிகள் என ஒரு வீட்டில் கிடைக்கும் அத்தனையும் போட் ஹவுசுகளில் கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் இந்தப் பயணத் திட்டத்தை வைத்துக் கொண்டால் சிறப்பான அனுபவத்தை அடைய இயலும்.

மூணார்:

மலைப் பிரதேசம் என்றாலே நினைவுக்கு வருவது தேயிலைத் தோட்டங்களும் காபித் தோட்டங்களும் தான். மூணாரிலும் அதே தேயிலைத் தோட்டங்கள் தான் இருக்கப்போகிறது என்று வாதிடப் போகிறவர்களுக்கு மலைப்பிரதேசத்தில் உள்ள சைட்சீயிங் பகுதிகள் தான் மிகச் சிறப்பானதாக் இருக்கும். குளிர்மையான சூழலில் இயற்கை எழிலை காண்பது என்பது மனதிற்கு ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல்  இறவிக்குளம் தேசியப் பூங்கா, மேட்டுப்பட்டி டேம் என பார்ப்பதற்கு இடங்கள் இங்கே நிறைய இருக்கின்றன.

கோழிக்கோடு:

டச்சுக்காரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த இடம் கோழிக்கோடு என்றால் மிகையல்ல. இங்குள்ள கட்டிடங்களில் டச்சுக்காரர்களின் கட்டிடக்கலை சாயல் கட்டாயம் இருக்கிறது. உணவு விரும்பிகள் கட்டாயம் இந்தப் பகுதிகளுக்கு கட்டாயம் விசிட் செய்ய வேண்டும் கோழிகோடு கடற்கரை , புகழ்பெற்ற சிவன் கோவில், பழசிராசா மியூசியம், பேபார் கடற்கரை என ஆசியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களின் கூடாரமாக கோழிக்கோடு திகழ்கிறது. செப்டம்பரிலிருந்து மே வரை இங்கு சுற்றிப் பார்க்கத் தகுதியான நேரமாக கருதப்படுகிறது.

இடுக்கி:

ட்ரெக்கிங் செல்ல இளைஞர்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அப்போது கண்டிப்பாக இடுக்கி சிறந்த இடமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையை ரசிப்பவர்க்கும் மாதம் ஒரு நாள் விடுப்பு எடுத்து தன்னை இயற்கைக்கு கொடுப்பவர்க்கு இடுக்கி ஒரு சொர்க்கமாகும். இடுக்கி  அணை சீயப்பாறை நீர் வீழ்ச்சி சலிம் அலை பறவைகள் சரணாலயம்  சுற்றிப்பார்க்க சிறந்த இடம். ஜூன் ,ஆகஸ்ட் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி இங்கு சுற்றுலா செல்லச் சிறந்த இடம்.

திரிசூர்:

கேரளா கலாச்சாரத்தைப் பற்றி புரிந்துகொள்ள நாம் திரிசூரை விசிட் அடித்தால்  போதும் இங்கு நடக்கும் பூரம்  திருவிழா மிகவும் பிரசித்துப் பெற்றவை ஆகும். இதற்காக பெரும் மக்கள் கூட்டம் கூடும். இங்குள்ள வலச்சல் நீர்வீழ்ச்சி பகவதி அம்மன் கோவில், அதிரபள்ளி நீர்வீழ்ச்சி ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

வீட்டில் தெய்வ கடாட்சம் இருக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

வீட்டில் தெய்வ உறைவிடமாக இருப்பது பூஜை அறை தான். எனவே காலை மாலை என இரு வேலைகளிலும் விளக்கு ஏற்றி கடவுளை வணங்குதல் குடும்பத்திற்கு நல்ல பயன்களைத் தருகிறது.

வீடு வாஸ்துப்படி இல்லை இடித்துவிட்டுத் தான் கட்டவேண்டும் என்ற நிலைக்குச் செல்ல முடியவில்லையா கவலையை விடுங்கள் தற்காலிக பரிகாரங்கள் இருக்கிறது. வாஸ்து குறைபாடு உள்ள இடத்தில் படிகத்தால் ஆன சிறிய சிவலிங்கத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் இட்டால் தற்காலிக வாஸ்து குறைபாடு நீங்கும். நிரந்தரத் தீர்வை எட்டும் வரை இதைச் செய்வது வாஸ்து பிரச்சினையில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

குழந்தைகள் நமது குடும்பத்தில் அடுத்த அத்தியாயம். அவர்களை நேர்மறையான எண்ணங்களுடன் வளர்ப்பது நமது கடமை என்பதால் குழந்தைகள் இருக்கும் இடங்களில் நேர்மையான பொருட்களை வைப்பது நல்லது.

 

அனுமனுக்கு வெற்றி மாலை சாத்துவது ஏன்?

சனிக்கிழமை தோறும் நடக்கும் பூஜைகளில் அனுமனுக்கு வடை மாலை, சுண்டல் மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை போன்ற மாலைகளை அணுவித்து வழிபடுவதை  பார்த்திருக்கிறோம். அதற்கான காரணம் என்னவென்பதை நாம் சிந்தித்தது உண்டா?

வெற்றிலை மாலை அணிவிப்பதற்கான காரணத்தை மட்டும் இதில் காண்போம்.

இராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் அடைக்கப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் தேடிச் சென்றனர். சீதையைக் கண்டறிந்த அனுமன் தான் வந்த காரணத்தை சொல்ல முற்பட்டான்.

ஆனால் இது இராவணனின் சூழ்ச்சியாக இருக்குமோ என சந்தேகித்து கணையாழியை எடுத்து காட்டினாள். அது எம்பெருமான் இராமனுடையது எனக் கண்டறிந்து விளக்கம் அளித்தார் அனுமன்.

அடியேன் சீதையைக் கண்டறிய பட்டபாடுகளை எடுத்துரைத்தார் அனுமன். தன்னைச் சுற்றியிருந்த வெற்றிலைக் கொடியை மாலையாக்கி அனுமனுக்கு சூட்டினாள் சீதை அந்த வழக்கமே இன்றும் கோவில்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டப்படுகிறது.

வீட்டின் வாசலில் இதெல்லாம் இருக்கனுமா?

வீட்டின் வாசலில் வேப்பிலை மா இலை என நிறையக் கட்டியிருப்பார்கள் அதில் எதைக் கட்டலாம் என்பதை தெரிந்து கொண்டு கட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

நேர்மறையான எண்ணங்களைத் தர:

நேர்மறையான எண்ணங்கள் நம்மை வெற்றியை நோக்கி பயணப்பட வைக்கும். வீட்டிற்குள் நுழையும் வெளிநபர்களுக்கும் அதே தாக்கம் இருப்பது நமது முயற்சிக்கு வழிசேர்க்கும். அந்த வகையில் வாசலில் மாயிலையும், வேப்பிலையும் கட்டினால் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

கோவில் மாலை:

கோவில்களில் நமக்கு மாலை போட்டாலோ அல்லது சாமியின் மேல் சாத்திய மாலையை கொடுத்தாலோ என்ன செய்வது என்ற குழப்பம் சிலருக்கு இருக்கத் தான் செய்யும்.

வீட்டிற்கு எடுத்து வரலாமா என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும். ஒரு வேளை வீட்டிற்கு எடுத்து வரலாம் என முடிவு செய்தால் அதை வைப்பதற்கு இடம் இருக்கிறது. வீட்டு வாசலில் அதை மாட்டி வைக்கலாம். ஏனெனில் தெய்வத்தின் மீது சாத்தப்பட்ட அல்லது தெய்வத்திற்கு அர்ச்சிக்கப்பட்ட மாலை என்பது தெய்வீகத் தன்மை உள்ளதால் வீட்டில் துஷ்ட சக்திகள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் என்பது ஐதீகம்.

குங்குமம் தடவிய எலுமிச்சைப் பழம் :

குங்குமம் தடவிய எலுமிச்சைப்பழம் செவ்வாய் வெள்ளிகளில் வாசலின் இருதுருவங்களில் வைக்கப்படுகிறது அதை ஏன் எனச் சிந்தித்துள்ளோமா? செவ்வாய் வெள்ளி என்பது தெய்வகத்துக்கு உகந்த நாளாக இந்து சமய மக்களால் நம்பப்படுகிறது. எலுமிச்சை என்பது அம்மனுக்கு உகந்த பழமாக கருதப்படும் நிலையில் குங்குமம் வைத்து அம்மனை வீட்டிற்கு அழைப்பதாக பொருளில் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

கடைகள் வைத்திருப்பவர்கள் தினமும் எலுமிச்சையை இரண்டாக நறுக்கி வாசலில் வைப்பது வழக்கம். திருஷ்டிக்காக வைப்பதும் தெய்வீக கடாட்சம் பெருகி வியாபாரம் கலைத்தோங்கவும் இதைச் செய்கிறார்கள்.

வீட்டிற்குள் நுழையும் போது கிரக லக்‌ஷ்மியை வேண்டிக்கொண்டு சென்றால் வீட்டில் சந்தோசம் நிலைப்பது நிச்சயம்.