வீட்டில் தெய்வ கடாட்சம் இருக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

வீட்டில் தெய்வ உறைவிடமாக இருப்பது பூஜை அறை தான். எனவே காலை மாலை என இரு வேலைகளிலும் விளக்கு ஏற்றி கடவுளை வணங்குதல் குடும்பத்திற்கு நல்ல பயன்களைத் தருகிறது.

வீடு வாஸ்துப்படி இல்லை இடித்துவிட்டுத் தான் கட்டவேண்டும் என்ற நிலைக்குச் செல்ல முடியவில்லையா கவலையை விடுங்கள் தற்காலிக பரிகாரங்கள் இருக்கிறது. வாஸ்து குறைபாடு உள்ள இடத்தில் படிகத்தால் ஆன சிறிய சிவலிங்கத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் இட்டால் தற்காலிக வாஸ்து குறைபாடு நீங்கும். நிரந்தரத் தீர்வை எட்டும் வரை இதைச் செய்வது வாஸ்து பிரச்சினையில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

குழந்தைகள் நமது குடும்பத்தில் அடுத்த அத்தியாயம். அவர்களை நேர்மறையான எண்ணங்களுடன் வளர்ப்பது நமது கடமை என்பதால் குழந்தைகள் இருக்கும் இடங்களில் நேர்மையான பொருட்களை வைப்பது நல்லது.