அடி வயிற்று சதையை குறைக்க வேண்டுமா ;

 

பொதுவாக  பெண்ணாக இருந்தாலும் சரி  ஆண் என்றாலும் சரி  மிக  பெரிய  அளவில்  தொந்தரவாகவும்  ,பல பேருடைய  கேலி  கிண்டலுக்கும் ஆளாகுவது   வீண்  அடிவயிற்று  சதையாக தான் இருக்கும். உடனடியாக  தீர்வும்  தர வேண்டும்   என்பதற்காக  பணம்  வீணாகுவதோடு  மட்டுமல்லாமல்   ,  தேவையில்லாத   தொந்தரவுகளை  சந்திக்கின்றனர்.’  நோகாமல் நொங்கு  கும்பிடமுடியாது  என்று  பழமொழிக்கு  ஏற்றவாறு  நாம்   சிறுது  கடுமையான  முற்சிகளை  செய்வதில்   எந்த ஒரு  தவறுமில்லை . அந்த வகையில்  நம் அழகை  கெடுக்கும்  வகையிலும் உடலுக்கு   எந்த ஒரு பாதிப்பும்  தராத வகையில்   பின்பற்றக்கூடியப வழிமுறையை   தெரிந்து கொள்ளலாம் .

 

உடற்பயிற்சி ,யோகா செய்வது  நம் உடலுக்கு  நல்லது  தருவதோடு  மட்டுமல்லாமல்  நம்  மனதிற்கும்  நிம்மதி தருகிறது  .

தினமும்  உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்   ,வீட்டிலிருந்த யோகா  பயிற்சி மேற்கொள்ளலாம் . இது  நமது  உடல் மேனியை  கட்டுடல்  கலையாமல்  இருக்கும் .

 

 

 

உணவு முறைகளை  கடைபிடிக்கும்  வழிமுறைகள்  ;

 

எலுமிச்சை பழச்சாற்றுடன்    சிறிது  தேன்  கலந்து  பருகலாம் ,இது நமது  அடி வயிறு சதையை  குறைப்பதோடு   மட்டுமலலாமல்   ,  உடலின் இதர சதைகளையும்  குறைக்கும் . பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத  கரு காப்பியை  குடிக்கலாம் . காபி  குடிக்க  பழக்கமில்லாதவர்கள்   இளநீர்  குடிக்கலாம் .  ஆனால் அதனுள் இருக்கும்  தேங்காய்  உண்ண வேண்டாம் .  நாம் முடிந்த வரை  தேங்காயை   பயன்படுத்தாமல்  இருப்பது  நல்லது  . சட்னயில் கூட தேங்காய்   சேர்ப்பதர்க்கு பதிலாக  வெங்காயத்தை சேர்த்து   கொள்ளலாம் .

 

 

உணவில் சேர்த்து  கொள்ளகூடிய  விஷயங்கள் ;

 

பப்பாளி காயை கூட்டு  சேர்த்து  சமைக்கலாம்  அல்லது   பப்பாளி  வைத்து  சாம்பார் செய்து  சாப்பிடலாம் .பப்பாளியை  போன்று  முள்ளங்கியை  சேர்த்து கொள்ளலாம்  . நீர்முள்,நெருஞ்சி முள் ,கொத்தமல்லி ,சோம்பு  எல்லவற்றையும்  சம அளவு   எடுத்து  அதை தூள்  செய்து  டீயில்  ,தேயிலைக்கு  பதில்  சேர்த்து பருகலாம்  .

 

இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறைய ;

ஆமணக்கு  வேரை  நன்றாக  இடித்து  தேன்  கலந்து  பிசைந்து  சிறிது  தண்ணீர்  ஊற்றி   இரவு  முழுவதும்   ஊறவைத்து மறுநாள் நீரை   வடிகட்டி  தினமும்   அரை டம்ளர்   குடித்து வர இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறையும் .

 

உடல் எடை குறைய ,இடுப்பு வலி நீங்க !

 

பிரண்டை  துண்டுகளை ஒடித்து வந்து  ,அதன் தோலை  சீவி சிறு சிறு  துண்டுகளை வேக வைத்து ,அதனை காயா வைத்து   போடி செய்து கொள்ள வேண்டும்  . இந்த பொடியுடன்   ஒரு  தேக்கரண்டி  உப்பு , ஐந்துஎலுமிச்சை   பழச்சாறு   சேர்த்து  மறுபடியும்  உயர்த்தி  எடுத்து கொள்ளவேண்டும்   .தினசரி  இதில்   அரை தேக்கரண்டி   பொடியை உணவுடனோ  ,உணவுக்கு   முன்பு  தண்ணீரிலோ   கலந்து   சாப்பிட  உடல் எடை குறைவதோடு  மட்டுமல்லாமல் , பெண்களுக்கு  ஏற்படும்  பின்  இடுப்பு    வலியும் சரி ஆகும் .

 

மேற்குறிப்பிட்ட எந்த  மருந்துக்கும்  பத்தியம் கிடையாது .அதனால்  பக்க விளைவுகளும்  கிடையாது.