அட்டகத்தி தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ படையினர் – அதிர்ச்சியில் படக்குழுவினர்

அட்டகத்தி  படத்தின் மூலம் பிரபலமான  தினேஷை படப்பிடிப்பின் போது கமாண்டோ படையினர்   சுற்றி வளைத்தனர்.   இதனால்  படக்குழுவில் பதற்றம் ஏற்பட்டது  .

அட்ட கத்தி தினேஷ் நடிக்கும் படங்கள்  என்றாலே சமுதாய பார்வையில்    ஒரு வித்யாசமான படைப்பாக இருக்கும்.  தினேஷ் நடித்த வந்த படங்களான அட்டகத்தி, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றைஅழுத்தவும், விசாரணை, அண்ணனுக்கு ஜெய் போன்ற பல படங்கள்  ரசிகர்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் , விருதுகளையும் பெற்றது .

அதிலும் விசாரணை  படத்தின்   மூலம் தினேஷ்   நடிப்பிற்கு  ஒரு புதிய பரிணாமம் கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான  நடிப்பையையும்  ,  நல்ல கதைகளை     இவர் தேர்ந்தெடுப்பதில்   அதிக கவனம்  செலுத்தி வருகிறார் . இவரது அடுத்த படமாக வெளி வர இருக்கும்  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் படப்பிடிப்பு  சென்னையில்   நடந்து கொண்டிருக்கிறது  .

படத்தில்  வர இருக்கும்   ஒரு காட்சியான லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் லாரியின் உள்ளே இருந்து படமாக்கிக் கொண்டிருந்தனர். படத்தளத்தில் பயன்படுத்திய  துப்பாக்கியை பார்த்த கமாண்டோ படையினர்   உண்மையான துப்பாக்கி என்று நினைத்து நடிகர் தினேஷை சுற்றி வளைத்தனர் .

அப்போது அருகிலிருந்த  படக்குழுவினர்கள் பதறி  அடித்து கொண்டு  ஷூட்டிங்  என்று  கூறியவுடனும், தினேஷை   பார்த்துவிட்டு இது  படப்பிடிப்பு  என்று உறுதிப் படுத்திக் கொண்ட கமாண்டோ படையினர் அங்கிருந்து சென்றனர் .