செயற்கை மலர்கள் செய்ய வேண்டுமா? கீழ்காணும் பொருட்கள் இருந்தால் போதும்

இல்லத்தரசிகள் தங்களின் ஓய்வு நேரத்தை போக்க வழியின்றித் தவிக்கிறீர்களா? தங்கள் வீட்டை இன்னும் அழகுப் படுத்த விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் சம்பாதிக்கும் எண்ணம் இருக்கிறதா? டைம் பாஸ் பண்ண வழியின்றித் தவிக்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை நிறைவேறவேண்டுமெனில் இதை மட்டும் செய்யுங்கள்.

மலர்கள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பெண்களாக மட்டும் தான் இருப்பார்கள். சிலருக்கு சில மலர்களின் வாசனை ஒவ்வாது. அதற்காகவே செயற்கை மலர்கள் இருக்கின்றன. அத்தகைய செயற்கை மலரை செய்வது கடினமான காரியம் ஒன்றும் இல்லை.

மேலும் பெண்களைப் பொறுத்தவரையில் ஒருவர் பயன்படுத்தும் மாடலை நாம் பயன்படுத்தக் கூடாது என்கிற எண்ணம் பெரும்பாலும் உண்டு. கடைகளில் பெரும்பாலும் ஒரேவிதமான டிசைன்களில் தான் கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆகையால் தனக்கான தனித்தன்மையை நிரூபீக்க கைவினைப் பொருட்களை மிகக் குறைந்த செலவில் தாங்களாகவே தயாரிக்கக் கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்தத் தொடரைக் கட்டாயம் வாசியுங்கள்.

இந்தக் கட்டுரையில் செயற்கை மலர்கள் எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

செயற்கை மலர்கள் செய்யத் தேவையான பொருட்கள்

1) காகிதம் – கிரேப், டபுள் கிரேப், மெல்லிய கைதுடைக்கும் தாள்,

2) துணி  – சாட்டின், சில்க்  ஆர்கண்டி, மெழுகு, நெட்டி ஸ்டாக்கிங் சோப் வெல்வெட்

போன்ற பொருட்களில் செயற்கை மலர்களைச் செய்தால் ஒரு சிறப்பான டிசைன்களில் கிடைக்கும்.

உபகரணங்கள்:

1)2 கூர்மையான கத்திரிக்கோல்கள் – காகிதம் வெட்ட-1, துணி வெட்ட – 1

2) ப்ளையர் – கம்பிகளை வெட்ட, முறுக்கிவிட பயன்படும்.

3) ஃப்ளோரல் டேப் – வெள்ளை, பச்சை, சிவப்பு என பலவண்ணங்களில் கிடைக்கும். இதற்கு பதில் கிரேப் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரும் பயன்படுத்தலாம்