விவசாய நிலங்கள் பறிப்பு : தேர்தல் வாக்குறுதிகளின் அவலம்


தூத்துக்குடி கயத்தாரில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 400 ஏக்கர் விவசாய
நிலங்களை எந்த நோட்டிசும் வழங்காமல் பட்டா நீக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து
தூத்துக்குடி தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி போராட்டம் நடத்தப்போவதாக
தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் கோரிக்கையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம்
விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று சொல்வது உண்மைதான். ஒட்டுமொத்த விவசாய
நிலத்தையும் அபகரித்துக் கொண்டாள் விவசாயக் கடனே வராது என்பதால் தான் அவ்வளவு
தைரியமா வாக்குறுதி கொடுத்தார்கள் .

இந்நிலையில் கோவையில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000ம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்
மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் விவசாய அணியினர் மோடிக்கு
17 ரூபாய் வரைவு காசோலையை விரைவு தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசும், எதிர்கட்சிகளும் மாறி மாறி அறிக்கைகள் விடும்
இந்தச் சமயத்தில் விவசாயப் பட்டாக்கள் அபகரிப்பு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *