மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் – மமக

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் 11ஆம்
ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மத்திய அரசும் மதவாத
போக்கும் என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் சையது மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திராவிடர்
கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு
உரையாற்றினர்.

இந்துக்களுக்கு எதிராக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் செயல்படுவதாக
ஹெச்.ராஜா குற்றம் சாட்டிய நிலையில் இந்த நிகழ்வு அரசியல் வட்டத்தில் சிறு சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *